கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று நடைபெற்ற 'நதிகளை மீட்போம்' கருத்தரங்கில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள் கலந்து கொண்டு சத்குருவுடன் கலந்துரையாடினர்.
கோவை : கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று நடைபெற்ற 'நதிகளை மீட்போம்' கருத்தரங்கில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள் கலந்து கொண்டு சத்குருவுடன் கலந்துரையாடினர்.

நதிகளை மீட்போம் இயக்கத்தின் கருத்தரங்கம் இன்று காலை கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விவசாயிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள், நீர்ப்பாசனம், நதி நீர் அதிகரிப்பு உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய சத்குரு, 'தென்னிந்தியாவில் இருந்து இமய மலை வரை உலகத்தில் உள்ள அனைத்துப் பயிர்களையும் விளைவிக்கக்கூடிய சீதோஷண நிலை தமிழகத்திற்கு உண்டு. ஆனால், விவசாயிகள் ஒன்று கூடி செயல்படாமல் பலவீனமாக உள்ளனர். விவசாயத்தை நம்பிய நாட்டின் அரசு விவசாயிகளின் அரசாகத்தான் இருக்க முடியும்.
பல்வேறு நாடுகளில் இன்று வெற்றிகரமாகச் செயல்படும் அவர்கள் நம் நாட்டுப் பல்கலையில் படித்துச் சென்றவர்கள். கால்நடைகளும், மரங்களும், விலங்குகளும் தேவையான அளவு வைத்திருக்க வேண்டும், அப்போது தான் மண் வளமுறும். இது நம் முன்னோர்கள் அறிந்த ஒன்றாகும். விவசாயிகளுக்கான 'ஆப்' (APP) ஒன்றைத் துவங்க உள்ளோம். அது அனைத்து விவசாயிகளுக்கும் பயனளிக்கும் வகையில் இருக்கும். இந்த நிகழ்ச்சியில், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, தமிழ்நாடு விவசாயிகள் கூட்டு இயக்கத்தின் மாநிலத் தலைவர் சுப்ரமணியம் போன்ற விவசாய சங்கத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

நதிகளை மீட்போம் இயக்கத்தின் கருத்தரங்கம் இன்று காலை கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விவசாயிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள், நீர்ப்பாசனம், நதி நீர் அதிகரிப்பு உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய சத்குரு, 'தென்னிந்தியாவில் இருந்து இமய மலை வரை உலகத்தில் உள்ள அனைத்துப் பயிர்களையும் விளைவிக்கக்கூடிய சீதோஷண நிலை தமிழகத்திற்கு உண்டு. ஆனால், விவசாயிகள் ஒன்று கூடி செயல்படாமல் பலவீனமாக உள்ளனர். விவசாயத்தை நம்பிய நாட்டின் அரசு விவசாயிகளின் அரசாகத்தான் இருக்க முடியும்.
பல்வேறு நாடுகளில் இன்று வெற்றிகரமாகச் செயல்படும் அவர்கள் நம் நாட்டுப் பல்கலையில் படித்துச் சென்றவர்கள். கால்நடைகளும், மரங்களும், விலங்குகளும் தேவையான அளவு வைத்திருக்க வேண்டும், அப்போது தான் மண் வளமுறும். இது நம் முன்னோர்கள் அறிந்த ஒன்றாகும். விவசாயிகளுக்கான 'ஆப்' (APP) ஒன்றைத் துவங்க உள்ளோம். அது அனைத்து விவசாயிகளுக்கும் பயனளிக்கும் வகையில் இருக்கும். இந்த நிகழ்ச்சியில், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, தமிழ்நாடு விவசாயிகள் கூட்டு இயக்கத்தின் மாநிலத் தலைவர் சுப்ரமணியம் போன்ற விவசாய சங்கத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.