நதிகளை மீட்போம் : சத்குருவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட விவசாயிகள்

கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று நடைபெற்ற 'நதிகளை மீட்போம்' கருத்தரங்கில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள் கலந்து கொண்டு சத்குருவுடன் கலந்துரையாடினர்.

கோவை : கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று நடைபெற்ற 'நதிகளை மீட்போம்' கருத்தரங்கில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள் கலந்து கொண்டு சத்குருவுடன் கலந்துரையாடினர்.



நதிகளை மீட்போம் இயக்கத்தின் கருத்தரங்கம் இன்று காலை கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விவசாயிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள், நீர்ப்பாசனம், நதி நீர் அதிகரிப்பு உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டன. 

நிகழ்ச்சியில் பேசிய சத்குரு, 'தென்னிந்தியாவில் இருந்து இமய மலை வரை உலகத்தில் உள்ள அனைத்துப் பயிர்களையும் விளைவிக்கக்கூடிய சீதோஷண நிலை தமிழகத்திற்கு உண்டு. ஆனால், விவசாயிகள் ஒன்று கூடி செயல்படாமல் பலவீனமாக உள்ளனர். விவசாயத்தை நம்பிய நாட்டின் அரசு விவசாயிகளின் அரசாகத்தான் இருக்க முடியும். 

பல்வேறு நாடுகளில் இன்று வெற்றிகரமாகச் செயல்படும் அவர்கள் நம் நாட்டுப் பல்கலையில் படித்துச் சென்றவர்கள். கால்நடைகளும், மரங்களும், விலங்குகளும் தேவையான அளவு வைத்திருக்க வேண்டும், அப்போது தான் மண் வளமுறும். இது நம் முன்னோர்கள் அறிந்த ஒன்றாகும். விவசாயிகளுக்கான 'ஆப்' (APP) ஒன்றைத் துவங்க உள்ளோம். அது அனைத்து விவசாயிகளுக்கும் பயனளிக்கும் வகையில் இருக்கும். இந்த நிகழ்ச்சியில், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, தமிழ்நாடு விவசாயிகள் கூட்டு இயக்கத்தின் மாநிலத் தலைவர் சுப்ரமணியம் போன்ற விவசாய சங்கத் தலைவர்கள் கலந்துகொண்டனர். 

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...