பொது மக்களுக்காக தொலைநோக்குப் பார்வையில் உருவாக்கப்பட்ட பட்ஜெட் : சர்வதேச தொழில்முனைவோர் அமைப்பு கருத்து

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் நடுநிலைமையுடனும், பொதுமக்களுக்காக தொலைநோக்குப் பார்வையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக சர்வதேச தொழில்முனைவோர் அமைப்பு தெரிவித்துள்ளது.

கோவை: மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் நடுநிலைமையுடனும், பொதுமக்களுக்காக தொலைநோக்குப் பார்வையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக சர்வதேச தொழில்முனைவோர் அமைப்பு தெரிவித்துள்ளது. 

மத்திய பட்ஜெட்டிற்கு வரவேற்பு தெரிவித்து சர்வதேச தொழில்முனைவோர் அமைப்பின் தலைவர் ஆடிட்டர் ஜி. கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தேசிய பாதுகாப்புத் திட்டம் என்ற திட்டத்தின் பெயரில் 10 கோடி குடும்பங்களுக்கு 5 லட்ச ரூபாய் காப்பீடு என்பது வரவேற்கத்தக்க ஒன்று. இதுதவிர இந்த பட்ஜெட்டில் வங்கிக் கடன் மட்டும் இல்லாமல் மற்ற தொழில் தொடங்குபவர்களும் கடன் வாங்கும் விதமாக மாற்று நிதி திட்டங்கள் இருப்பது தொழில் தொடங்குபவர்களுக்கு மற்றும் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

தவிர இந்த பட்ஜெட்டில் கண்டுபிடிப்புகள் தொடர்பான தொழில்நுட்பத்திற்கு அதிகளவில் நிதி ஒதுக்காதது மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா ஆகியவற்றுடன் ஒவ்வாததைப் போன்று உள்ளது. ரூ. 250 கோடி வரை விற்பனை உள்ள கம்பெனிகளுக்கான வரிவிகிதம் 30%-ல் இருந்து 25% ஆக குறைக்கப்பட்டது நல்ல மாற்றம். நிறுவனங்கள் மற்றும் எல்.எல்.பி. ஆகியவற்றிற்கும் தற்போதைய வரி 30%-ல் இருந்து 25% ஆக குறைத்திருக்க வேண்டும். அமெரிக்காவில் டிரம்ப் அரசு சமீபத்தில் கம்பெனிகளுக்கான வரியை 37%-ல் இருந்து 21% ஆக குறைத்தது குறிப்பிடத்தக்கது.

தனிநபர் வருமான வரி வரம்பு, வீட்டுக் கடனுக்கான வட்டி கழிவு ரூ.2,00,000/- ஆகியவற்றில் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும், சொல்லக்கூடிய குறைந்தபட்ச மாற்று வரி விகிதம் குறைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாற்றம் எதுவுமில்லை. பொதுவில் இந்த நல்ல ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைவதை அரசாங்கம் உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...