உள்ளாட்சித் தேர்தலுக்காக வார்டு எல்லைகளை மறுவரையறை செய்வது குறித்து பொது மக்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
கோவை: உள்ளாட்சித் தேர்தலுக்காக வார்டு எல்லைகளை மறுவரையறை செய்வது குறித்து பொது மக்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
உள்ளாட்சி தேர்தலுக்காக வார்டு எல்லைகளை மறுவரையறை செய்யும் முறை தற்போது நடைபெற்று வருகின்றது. வார்டுகள் மறுவரையறை தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிவதற்கான மண்டல அளவிலான கூட்டம் இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களின் கருத்துக்களை மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், எல்லை மறுவரையறை ஆணைய உறுப்பினர் செயலர் ராஜசேகர், நகராட்சிகள் நிர்வாக ஆணையர் பிரகாஷ், பேரூராட்சிகள் இயக்குநர் பழனிச்சாமி ஆகியோர் கேட்டறிந்தனர்.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என தனித்தனியே நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா, ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகரன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், எல்லை மறுவரையறை கருத்துகேட்பு கூட்டம் அந்தந்த மாவட்டங்களில், பெயரளவிற்கு நடத்தப்பட்டதாகவும், இப்போது, மண்டல அளவிலான கருத்துகேட்பு கூட்டத்திலாவது, பொதுமக்களின் முறையான கருத்துக்களை பதிவு செய்து சீர்ப்படுத்தவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
உள்ளாட்சி தேர்தலுக்காக வார்டு எல்லைகளை மறுவரையறை செய்யும் முறை தற்போது நடைபெற்று வருகின்றது. வார்டுகள் மறுவரையறை தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிவதற்கான மண்டல அளவிலான கூட்டம் இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களின் கருத்துக்களை மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், எல்லை மறுவரையறை ஆணைய உறுப்பினர் செயலர் ராஜசேகர், நகராட்சிகள் நிர்வாக ஆணையர் பிரகாஷ், பேரூராட்சிகள் இயக்குநர் பழனிச்சாமி ஆகியோர் கேட்டறிந்தனர்.
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என தனித்தனியே நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா, ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகரன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், எல்லை மறுவரையறை கருத்துகேட்பு கூட்டம் அந்தந்த மாவட்டங்களில், பெயரளவிற்கு நடத்தப்பட்டதாகவும், இப்போது, மண்டல அளவிலான கருத்துகேட்பு கூட்டத்திலாவது, பொதுமக்களின் முறையான கருத்துக்களை பதிவு செய்து சீர்ப்படுத்தவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.