கோவை ஏ.டி.எம் கொள்ளையில் வழக்கில் முக்கிய நபர் கைது: கொள்ளையன் குறித்து அதிரவைக்கும் தகவல்கள்

கோவையில் நடைபெற்ற ஏ.டி.எம் கொள்ளை சம்பவத்தில் ஹரியானாவை சேர்ந்த நபரை கோவை மாநகர தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவையில் நடைபெற்ற ஏ.டி.எம் கொள்ளை சம்பவத்தில் ஹரியானாவை சேர்ந்த நபரை கோவை மாநகர தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.



கோவை பீளமேடு அருகே உள்ள தனியார் ஏ.டி.எம் மையத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9-ம் தேதி புகுந்த மர்ம நபர்கள் ரூ.3 லட்சம் பணத்தை கொள்ளையடித்தனர். 

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த தினங்களில் அருகில் இருக்கும் ஏ.டி.எம். மையங்களிலும் புகுந்து கைவரிசை காட்டிய அந்த கும்பல் மொத்தமாக ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றது. 

இந்த கொள்ளையர்களை பிடிக்க மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் தலைமையில் 7 தனிப்படைகளை அமைத்து மாநகர காவல் ஆணையர் K.பெரியய்யா உத்தரவிட்டார். 

தனிப்படையினரின் விசாரணையின் போது கொள்ளையர்கள் நாமக்கல் மற்றும் சேலம் வழியாக பெங்களூர் தப்பிச்செல்ல இருப்பது தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து அந்த மாவட்டங்களின் போலீசாருடன் இணைந்து செயல்பட்ட கோவை மாநகர போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட ஜீல்பிகர், முஸ்டாக், மோசம்கான், சுபேர், அமித்குமார், முபாரக், அமீன் மற்றும் சுபேர் ஆகியோரை கைது செய்தனர். 

இந்த கொள்ளை கும்ன்பலின் தலைவன், போலீசாரிடம் இருந்து தப்பித்து தலைமறைவாகினார். 

தொடர்ந்து, தப்பியோடிய கொள்ளையனை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டது ஹரியான மாநிலத்தை சேர்ந்த சித்திக் அகம்மது என்பவரது மகன் இசுலாமுதீன் (42) என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் பகுதிக்கு இசுலாமுதீன் அவரது காதலியை சந்திக்க வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில், நேற்று இரவு ராஜஸ்தான் மாநில போலீசாரின் உதவியுடன் இசுலாமுதீனை கோவை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த போலீசாரால் தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்படிருப்பதும், அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. 

இந்த கொள்ளை கும்பல் மீது டெல்லி, ஹரியான, உத்திரபிரதேசம், குஜராத், கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வழிப்பறி, வீடு புகுந்து கொள்ளையடித்தல் போன்ற 34-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

கொள்ளை வழக்கு ஒன்றிற்காக ஹரியானா மாநில மேவாத் மாவட்ட போலீசாரால் தனது கும்பலுடன் கடந்த கடந்த 2016-ம் இசுலாமுதீன் கைது செய்யப்படுள்ளார்.

தற்போது கோவை மாநகர போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...