நீலகிரியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை உயிரிழப்பு

நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி அருகே உள்ள கப்பட்டி கிராமத்தில் தனியார் விடுதிக்கு சொந்தமான ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்தது.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி அருகே உள்ள கப்பட்டி கிராமத்தில் தனியார் விடுதிக்கு சொந்தமான ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்தது.       



நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கப்பட்டி கிராமத்தில் தனியார் விடுதிக்கு சொந்தமான ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டுள்ளது. இதனை அந்த தனியார் விடுதி நிர்வாகம் மூடாமல் இருந்ததால் அப்பகுதியில் சுற்றி திரிந்த காட்டெருமை அந்த கிணற்றில் தவறி விழந்துள்ளது.



இதனையறிந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து வன அதிகாரி கணேசன் தலைமையில் கிணற்றில் விழந்த காட்டெருமையை  காப்பற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் அந்த காட்டெருமை உயிரிழந்தது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், இது போன்ற சம்பவங்கள் இப்பகுதியில் அதிகளவு நடைபெறுவதற்கு தனியார் விடுதிகள், அரசின் அனுமதி பெறாமல் இது போன்ற ஆழ்துளை கிணறுகள் வெட்டுதல், பாறைகள் உடைத்தல் போன்ற சட்ட விரேத செயல்களில் ஈடுபடுவதே காரணம் என்றும் இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...