நீலகிரி மாவட்டம் கேத்தி மலைபாதையில் ஐநூறு அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒட்டுனர் பலியானார். மேலும், 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் கேத்தி மலைபாதையில் ஐநூறு அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒட்டுனர் பலியானார். மேலும், 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

உதகையை அடுத்துள்ள அண்ணாகாலனி பகுதியை சேர்ந்த சதிஷ், முத்து, சசி உள்ளிட்ட 3 பேர் மாலை 7 மணி அளவில் லாரியில் காய்கறியை ஏற்றிக் கொண்டு உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் சென்று கொண்டிருந்தனர். அப்போது, லாரியானது கேத்தி அருகே சென்ற போது கட்டுபாட்டை இழந்து 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து அங்குள்ள வீட்டின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில், அந்த வீட்டில் இருந்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் லாரியில் சென்ற சதிஷ் மற்றும் முத்து ஆகியோரை பலத்த படுகாயங்களுடன் மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் உதவி சிகிச்சை அளிக்கபட்ட பின்னர் சதிஷ் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கபட்டார். இதனிடையே, இந்த விபத்தில் சிக்கிய மற்றொருவரின் நிலை என்ன என்று தெரியாததால் அவரை தேடும் பணி நள்ளிரவு வரை தொடர்ந்து நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை சசிகுமார் உடல் சடலமாக மீட்கப்பட்டது இது குறித்து கேத்தி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உதகையை அடுத்துள்ள அண்ணாகாலனி பகுதியை சேர்ந்த சதிஷ், முத்து, சசி உள்ளிட்ட 3 பேர் மாலை 7 மணி அளவில் லாரியில் காய்கறியை ஏற்றிக் கொண்டு உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் சென்று கொண்டிருந்தனர். அப்போது, லாரியானது கேத்தி அருகே சென்ற போது கட்டுபாட்டை இழந்து 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து அங்குள்ள வீட்டின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.

இதில், அந்த வீட்டில் இருந்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் லாரியில் சென்ற சதிஷ் மற்றும் முத்து ஆகியோரை பலத்த படுகாயங்களுடன் மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் உதவி சிகிச்சை அளிக்கபட்ட பின்னர் சதிஷ் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கபட்டார். இதனிடையே, இந்த விபத்தில் சிக்கிய மற்றொருவரின் நிலை என்ன என்று தெரியாததால் அவரை தேடும் பணி நள்ளிரவு வரை தொடர்ந்து நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை சசிகுமார் உடல் சடலமாக மீட்கப்பட்டது இது குறித்து கேத்தி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.