நீலகிரியில் 500 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் பலி

நீலகிரி மாவட்டம் கேத்தி மலைபாதையில் ஐநூறு அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒட்டுனர் பலியானார். மேலும், 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் கேத்தி மலைபாதையில் ஐநூறு அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒட்டுனர் பலியானார். மேலும், 2 பேர் படுகாயம் அடைந்தனர்.



உதகையை அடுத்துள்ள அண்ணாகாலனி பகுதியை சேர்ந்த சதிஷ், முத்து, சசி உள்ளிட்ட 3 பேர் மாலை 7 மணி அளவில் லாரியில் காய்கறியை ஏற்றிக் கொண்டு உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் சென்று கொண்டிருந்தனர். அப்போது, லாரியானது கேத்தி அருகே சென்ற போது கட்டுபாட்டை இழந்து 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து அங்குள்ள வீட்டின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. 



இதில், அந்த வீட்டில் இருந்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் லாரியில் சென்ற சதிஷ் மற்றும் முத்து ஆகியோரை பலத்த படுகாயங்களுடன் மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் உதவி சிகிச்சை அளிக்கபட்ட பின்னர் சதிஷ் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கபட்டார். இதனிடையே, இந்த விபத்தில் சிக்கிய மற்றொருவரின் நிலை என்ன என்று தெரியாததால் அவரை தேடும் பணி நள்ளிரவு வரை தொடர்ந்து நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை சசிகுமார் உடல் சடலமாக மீட்கப்பட்டது இது குறித்து கேத்தி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...