திருமண மோசடி செய்த ஸ்ருதி மீது மேலும் ஒரு வழக்கு : போலீஸார் அடித்து துன்புறுத்தியதாக கண்ணீர் மல்க நீதிபதியிடம் நடிகை புகார்

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஸ்ருதி, மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கோவை : திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஸ்ருதி, மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

சேலத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி, ரூ. 41 லட்சம் மோசடி செய்த வழக்கில் சினிமா நடிகை ஸ்ருதி, சித்ரா, பிரசன்ன வெங்கடேஷ், சுபாஷ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். நடிகை ஸ்ருதி திருமணம் செய்து கொள்வதாகக் கூறி,பல இளைஞர்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக அடுத்தடுத்து பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்நிலையில், பாலமுருகன் அளித்த புகாரின் பேரில் ஸ்ருதி உள்ளிட்ட 4 பேரை கைது செய்ய சென்ற போது, போலீஸாரை தாக்கிய வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டனர். 

இதைதொடர்ந்து, கடந்த 2016-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் சந்தோஷ்குமார் என்பவரிடம் ரூ. 43 லட்சம் மோசடி செய்த வழக்கில், இன்று ஸ்ருதி, சித்ரா, பிரசன்ன வெங்கடேஷ் ஆகிய 3 பேரை போலீஸார் இன்று கைது செய்தனர். ஏற்கனவே, சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், 3 பேரையும் மேலும் ஒரு வழக்கில் கைது செய்து கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். 

நீதிபதி முன்பு விசாரணையின் போது தன்னையும், தன் தாயாரையும் போலீசார் அடித்து துன்புறுத்தியதாக கதறியபடி நடிகை ஸ்ருதி தெரிவித்தார். மேலும், மீண்டும் போலீசார் விசாரணைக்கு அனுமதி அளிக்க வேண்டாம் எனவும் அவர் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார். 

இதனையடுத்து, 3 பேரையும் வரும் பிப்ரவரி 14-ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி நம்பிராஜன் உத்தரவிட்டார். இந்த வழக்கில் 3 பேரையும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை சைபர் கிரைம் போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணையை நாளைக்கு நீதிபதி நம்பிராஜன் ஒத்திவைத்தார். இதைத்தொடர்ந்து, ஸ்ருதி உள்ளிட்ட மூவரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...