திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் ஆண்டுக்கு இருமுறை மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என அறநிலைத்துறை அமைச்சர் மாணியக்லாயராவ் தெரிவித்த கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
திருப்பதி : திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் ஆண்டுக்கு இருமுறை மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என அறநிலைத்துறை அமைச்சர் மாணியக்லாயராவ் தெரிவித்த கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஆந்திர அமைச்சர் கூறுகையில், நாள்தோறும் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை பக்தர்கள் நிற்காமல் சென்றால் அரை மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யக்கூடிய நிலை உள்ளது. மேலும், ஒருவரே பலமுறை தரிசனம் செய்து வருகின்றனர். நாளுக்கு நாள் பெருகி வரும் கூட்டத்தால் சுவாமி தரிசனம் செய்து வைக்க முடியாமல் அதிகாரிகள் சிரமப்படுகின்றனர்.
எனவே, ஆதார் அட்டை மூலம் இணைத்து முதல் முறை வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளித்து, பின்னர் வாய்ப்பு இருந்தால் கூடுதல் தரிசனத்திற்கு அனுமதிக்கலாம். இதை நடைமுறைக்குக் கொண்டு வந்தால் மேலும் பல பக்தர்கள் பயனடைவார்கள். இது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும். இவ்வாறு கூறினார்.
அமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கூட்ட நெரிசலை சமாளிக்க வழியை தேடுவதை விட்டு விட்டு, பக்தர்கள் இத்தனை முறை தான் கடவுளை தரிசிக்க வேண்டும் என்று நிர்பந்திக்கக் கூடாது என்றும், ஆனால் விஐபி தரிசனம் என்ற பெயரில் விஐபி பிரேக் விடப்படுகிறது, இந்த சமயத்தில் 10,000 சாதாரண பக்தர்கள் தரிசிக்கலாம் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து ஆந்திர அமைச்சர் கூறுகையில், நாள்தோறும் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை பக்தர்கள் நிற்காமல் சென்றால் அரை மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யக்கூடிய நிலை உள்ளது. மேலும், ஒருவரே பலமுறை தரிசனம் செய்து வருகின்றனர். நாளுக்கு நாள் பெருகி வரும் கூட்டத்தால் சுவாமி தரிசனம் செய்து வைக்க முடியாமல் அதிகாரிகள் சிரமப்படுகின்றனர்.
எனவே, ஆதார் அட்டை மூலம் இணைத்து முதல் முறை வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளித்து, பின்னர் வாய்ப்பு இருந்தால் கூடுதல் தரிசனத்திற்கு அனுமதிக்கலாம். இதை நடைமுறைக்குக் கொண்டு வந்தால் மேலும் பல பக்தர்கள் பயனடைவார்கள். இது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும். இவ்வாறு கூறினார்.
அமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கூட்ட நெரிசலை சமாளிக்க வழியை தேடுவதை விட்டு விட்டு, பக்தர்கள் இத்தனை முறை தான் கடவுளை தரிசிக்க வேண்டும் என்று நிர்பந்திக்கக் கூடாது என்றும், ஆனால் விஐபி தரிசனம் என்ற பெயரில் விஐபி பிரேக் விடப்படுகிறது, இந்த சமயத்தில் 10,000 சாதாரண பக்தர்கள் தரிசிக்கலாம் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.