உலகம் முழுவதும் இருந்து தமிழறிஞர்கள் கலந்துகொள்ளும், ’இந்திய மாண்புகள்’ என்னும் தலைப்பிலான பன்னாட்டு கருத்தரங்கம் மார்ச்சில் நடைபெற இருக்கிறது.
கோவை : உலகம் முழுவதும் இருந்து தமிழறிஞர்கள் கலந்துகொள்ளும், ’இந்திய மாண்புகள்’ என்னும் தலைப்பிலான பன்னாட்டு கருத்தரங்கம் மார்ச்சில் நடைபெற இருக்கிறது.
இந்தியாவின் அறிவுசார் கலைகளை பாதுகாத்தல், அவற்றை மக்களுக்குத் தெரியப்படுத்துப்படுத்துதல், நமது மாணவர்களுக்குரிய பாடத்திட்டத்தில் அவற்றை உரிய முறையில் இணைத்தல் உள்ளிட்ட நோக்கங்களோடு வருகின்ற மார்ச் மாதம் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் இக்கருத்தரங்கம் நடத்தப்பட இருக்கிறது. தந்திரம், எந்திரம், மந்திரம், மணி, விளையாட்டு, சோதிடம், நாட்டியம் உள்ளிட்ட 31 தலைப்புகளில் கட்டுரைகளை அறிஞர்கள் வழங்க உள்ளனர்.
இக்கருத்தரங்கத்தில், இந்தியாவில் பத்து மாநிலங்களிலும், இலங்கை, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், ஜெர்மன் ஆகிய நாடுகளில் இருந்தும் அறிஞர் பெருமக்கள் மற்றும் கலை, மருத்துவம், பொறியியல் மாணவர்கள் உள்ளிட்ட 700 பேர் கலந்து கொள்ளும் இந்நிகழ்வு பெரிய நாயக்கன்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலாய வளாகத்தில் நடைபெற இருப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்
இந்தியாவின் அறிவுசார் கலைகளை பாதுகாத்தல், அவற்றை மக்களுக்குத் தெரியப்படுத்துப்படுத்துதல், நமது மாணவர்களுக்குரிய பாடத்திட்டத்தில் அவற்றை உரிய முறையில் இணைத்தல் உள்ளிட்ட நோக்கங்களோடு வருகின்ற மார்ச் மாதம் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் இக்கருத்தரங்கம் நடத்தப்பட இருக்கிறது. தந்திரம், எந்திரம், மந்திரம், மணி, விளையாட்டு, சோதிடம், நாட்டியம் உள்ளிட்ட 31 தலைப்புகளில் கட்டுரைகளை அறிஞர்கள் வழங்க உள்ளனர்.
இக்கருத்தரங்கத்தில், இந்தியாவில் பத்து மாநிலங்களிலும், இலங்கை, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், ஜெர்மன் ஆகிய நாடுகளில் இருந்தும் அறிஞர் பெருமக்கள் மற்றும் கலை, மருத்துவம், பொறியியல் மாணவர்கள் உள்ளிட்ட 700 பேர் கலந்து கொள்ளும் இந்நிகழ்வு பெரிய நாயக்கன்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலாய வளாகத்தில் நடைபெற இருப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்