கோவையில் திருமண தகவல் மையம் மூலமாக 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை : கோவையில் திருமண தகவல் மையம் மூலமாக 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை பி.என். பாளையம் பகுதியை சேர்ந்தவர் குமுதவள்ளி. திருமணமாகி கணவனை இழந்த இவர் காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மையம் மூலமாக வரன் தேடி வந்தார்.
இந்த நிலையில், வெள்ளலூர் பகுதியை சேர்ந்த புருசோத்தமன் (45) என்பவர் அறிமுகமானார். இவருக்கும் குமுதவள்ளிக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
இந்த நிலையில், புருசோத்தமன் ஏற்கனவே பல பெண்களுடன் திருமணமானவர் என்று குமுதவள்ளிக்கு தெரியவந்தது.
இதை தொடர்ந்து, அவர் போத்தனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் திருமண தகவல் மையம் நடத்தி வந்த மோகன் மற்றும் வனஜா குமாரி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதையறிந்த புருசோத்தமன் தலைமறைவாகினார்.
இது குறித்த பெண் காவலர் ஒருவர் கூறுகையில், "புருசோத்தமனுக்கு ஏற்கனவே திருமணமாகி கல்லூரி படிக்கும் வயதில் ஒரு மகள் இருக்கிறார். ஆனால், தனக்கு திருமணமானதை மறைத்து குமுதவள்ளியை அவர் திருமணம் செய்துள்ளார். இதற்கு சம்மந்தப்பட்ட இணையதள திருமண தகவல் மையம் நடத்தி வரும் மோகன் மற்றும் வனஜா குமாரி என்பவர்களும் உடந்தை என தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவர் 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தது தெரியவந்தது.
போலீசார் விசாரணை நடத்துகின்றனர் என்பதையறிந்த அவர் தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் அவரை போலீசார் நேற்று காலை கைது செய்தனர்.
கோவை பி.என். பாளையம் பகுதியை சேர்ந்தவர் குமுதவள்ளி. திருமணமாகி கணவனை இழந்த இவர் காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மையம் மூலமாக வரன் தேடி வந்தார்.
இந்த நிலையில், வெள்ளலூர் பகுதியை சேர்ந்த புருசோத்தமன் (45) என்பவர் அறிமுகமானார். இவருக்கும் குமுதவள்ளிக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
இந்த நிலையில், புருசோத்தமன் ஏற்கனவே பல பெண்களுடன் திருமணமானவர் என்று குமுதவள்ளிக்கு தெரியவந்தது.
இதை தொடர்ந்து, அவர் போத்தனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் திருமண தகவல் மையம் நடத்தி வந்த மோகன் மற்றும் வனஜா குமாரி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதையறிந்த புருசோத்தமன் தலைமறைவாகினார்.
இது குறித்த பெண் காவலர் ஒருவர் கூறுகையில், "புருசோத்தமனுக்கு ஏற்கனவே திருமணமாகி கல்லூரி படிக்கும் வயதில் ஒரு மகள் இருக்கிறார். ஆனால், தனக்கு திருமணமானதை மறைத்து குமுதவள்ளியை அவர் திருமணம் செய்துள்ளார். இதற்கு சம்மந்தப்பட்ட இணையதள திருமண தகவல் மையம் நடத்தி வரும் மோகன் மற்றும் வனஜா குமாரி என்பவர்களும் உடந்தை என தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவர் 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தது தெரியவந்தது.
போலீசார் விசாரணை நடத்துகின்றனர் என்பதையறிந்த அவர் தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் அவரை போலீசார் நேற்று காலை கைது செய்தனர்.