கோவையில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பள்ளி மாணவர்களுக்கு ரூ. 10-க்கு 5 இட்லியை வழங்கி வரும் தனியார் ஓட்டல்,பொதுமக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
கோவை: கோவையில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பள்ளி மாணவர்களுக்கு ரூ. 10-க்கு 5 இட்லியை வழங்கி வரும் தனியார் ஓட்டல், பொதுமக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
இயந்திரமயமான இன்றைய காலத்தில் அனைத்திலும் வியாபார நோக்கில் பார்க்கும் மக்களிடையே, அவ்வப்போது மக்களின் நலன்கருதி சிறிய அளவிலான உதவிகளை சிலர் ஆங்காங்கே செய்து கொண்டு தான் வருகின்றனர். அவர்களில் ஒருசிலர் பிரபலமாகின்றனர். பலர் வெளியுலகிற்கு தெரியாமலும் தங்களது உதவிகளை செய்து கொண்டே வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் உள்ள ஏ1 உணவகத்தில் பள்ளி மாணவர்களின் நலனை கருதி, ஓட்டல் உரிமையாளரான ராசு பள்ளி மாணவர்களுக்கு குறைந்த விலையில் காலை உணவை வழங்கி வருகிறார். ரூ. 10 கொண்டு சென்றால் போதும் 5 இட்லியை வாங்கிக் கொண்டு பள்ளிக்குச் செல்லலாம்.

இது குறித்து உரிமையாளர் ராசு கூறுகையில், கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அந்நிய குளிர்பானங்களை தவிர்க்குமாறு மாணவர்கள், பொதுமக்கள் கேட்டுக்கொண்டதின் பேரில் தங்களுடைய ஓட்டலில் அந்நிய குளிர் பானங்கள் விற்கப்படுவதில்லை. தற்போது, பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 5 இட்லி 10 ரூபாய்க்கு வழங்கி வருகிறேன். தமிழர் திருநாள் முதல் துவங்கப்பட்ட இந்தத் திட்டமானது மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
மாணவர்களிடையே பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில், இட்லிக்கு தேவையான சாம்பார், சட்னி பிளாஸ்டிக் கவர்களில் கொடுக்காமல் பாத்திரங்களில் வழங்குகிறோம். என்றார்.
கருமத்தம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியிலேயே இவரது ஓட்டலில் தான் குறைந்தபட்ச விலையில் புரோட்டா, சப்பாத்தி ரூ. 8-க்கும், தோசை ரூ.10-க்கும்,
மதிய முழு உணவு அசைவ குழம்புடன் ரூ. 50-க்கும் வழங்கி வருகிறார்.

இது குறித்து அப்பகுதியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், கருமத்தம்பட்டி, சோமனூர் பகுதியில் விசைத்தறி பிரதான தொழிலாக இருப்பதால், காலையில் நேரமாகவே பெற்றோர்கள் வேலைக்கு சென்று விடுகின்றனர். இதனால், பெரும்பாலான சமயம் குழந்தைகள் இரவு சமைத்த உணவையே சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு செல்கின்றனர். தற்போது, ஓட்டலில் குறைந்த விலையில் காலை உணவு கிடைப்பதால் குழந்தைகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இவ்வாறு தெரிவித்தனர்.
இயந்திரமயமான இன்றைய காலத்தில் அனைத்திலும் வியாபார நோக்கில் பார்க்கும் மக்களிடையே, அவ்வப்போது மக்களின் நலன்கருதி சிறிய அளவிலான உதவிகளை சிலர் ஆங்காங்கே செய்து கொண்டு தான் வருகின்றனர். அவர்களில் ஒருசிலர் பிரபலமாகின்றனர். பலர் வெளியுலகிற்கு தெரியாமலும் தங்களது உதவிகளை செய்து கொண்டே வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் உள்ள ஏ1 உணவகத்தில் பள்ளி மாணவர்களின் நலனை கருதி, ஓட்டல் உரிமையாளரான ராசு பள்ளி மாணவர்களுக்கு குறைந்த விலையில் காலை உணவை வழங்கி வருகிறார். ரூ. 10 கொண்டு சென்றால் போதும் 5 இட்லியை வாங்கிக் கொண்டு பள்ளிக்குச் செல்லலாம்.

இது குறித்து உரிமையாளர் ராசு கூறுகையில், கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அந்நிய குளிர்பானங்களை தவிர்க்குமாறு மாணவர்கள், பொதுமக்கள் கேட்டுக்கொண்டதின் பேரில் தங்களுடைய ஓட்டலில் அந்நிய குளிர் பானங்கள் விற்கப்படுவதில்லை. தற்போது, பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 5 இட்லி 10 ரூபாய்க்கு வழங்கி வருகிறேன். தமிழர் திருநாள் முதல் துவங்கப்பட்ட இந்தத் திட்டமானது மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
மாணவர்களிடையே பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில், இட்லிக்கு தேவையான சாம்பார், சட்னி பிளாஸ்டிக் கவர்களில் கொடுக்காமல் பாத்திரங்களில் வழங்குகிறோம். என்றார்.
கருமத்தம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியிலேயே இவரது ஓட்டலில் தான் குறைந்தபட்ச விலையில் புரோட்டா, சப்பாத்தி ரூ. 8-க்கும், தோசை ரூ.10-க்கும்,
மதிய முழு உணவு அசைவ குழம்புடன் ரூ. 50-க்கும் வழங்கி வருகிறார்.

இது குறித்து அப்பகுதியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், கருமத்தம்பட்டி, சோமனூர் பகுதியில் விசைத்தறி பிரதான தொழிலாக இருப்பதால், காலையில் நேரமாகவே பெற்றோர்கள் வேலைக்கு சென்று விடுகின்றனர். இதனால், பெரும்பாலான சமயம் குழந்தைகள் இரவு சமைத்த உணவையே சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கு செல்கின்றனர். தற்போது, ஓட்டலில் குறைந்த விலையில் காலை உணவு கிடைப்பதால் குழந்தைகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இவ்வாறு தெரிவித்தனர்.