வால்பாறையை அடுத்துள்ள கருமலை எஸ்டேட் பகுதியில் தோட்ட தொழிலாளியின் கால்நடையை சிறுத்தைப் புலி தாக்கிக் கொன்றது.
வால்பாறை: வால்பாறையை அடுத்துள்ள கருமலை எஸ்டேட் பகுதியில் தோட்ட தொழிலாளியின் கால்நடையை சிறுத்தைப் புலி தாக்கிக் கொன்றது.
வால்பாறை அடுத்துள்ள கருமலை எல்டி டிவிசனில் தேயிலை தோட்ட தொழிலாளி விஜயகுமாரி என்பவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இவர், வளர்த்து வந்த நான்கரை வயது மதிக்கத்தக்க பசுமாடு பீல்டு எண் 14-ல் மேய்ந்து கொண்டிருக்கும் போது தேயிலைச் செடிக்குள் பதுங்கியிருந்த சிறுத்தைப்புலி தாக்கி பசுமாடு உயிரிழந்தது.
மேலும், அந்த சிறுத்தைப்புலி தொடர்ந்து கருமலை எஸ்டேட் பகுதியில் மாலை மற்றும் பகல் நேரங்களில் சுற்றித்திரிந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
தொடர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் சிறுத்தைப்புலியை கூண்டு வைத்துப் பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.