கோவையில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட முதியவரின் சடலம் : 2 பேர் கைது

கோவையில் மர்மமான முறையில் முதியவர் உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை : கோவையில் மர்மமான முறையில் முதியவர் உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சுந்தராபுரம் பகுதியில் கடந்த 26-ம் தேதி கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில், சின்னத்தம்பி (60) என்ற முதியவர் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போத்தனூர் போலீஸார், முதியவர் கொலை செய்யப்பட்டாரா..? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக, கிருஷ்ண மூர்த்தி, கணேசன் ஆகிய இருவரை போத்தனூர் போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனியாக வசித்து வந்த சின்னத்தம்பியின் சொத்துக்களை எழுதித் தருமாறு மிரட்டியதாகவும், தர மறுத்ததால் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...