தாய்மாமனைக் கொலை செய்த வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை

தாய்மாமனைக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து கோவை 4-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை, ஜனவரி 29

தாய்மாமனைக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து கோவை 4-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம், கோவில்பாளையம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட கள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது தாய்மாமன் நடராஜன் வீட்டில் வசித்து வந்துள்ளார். வேலைக்கு ஏதும் செல்லாமல் வெட்டியாக சுற்றித் திரிந்த சிவகுமார் போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்.

இவரது தாய்மாமனான நடராஜன், கூலி வேலைக்குச் செல்பவர். அவ்வப்போது சிவக்குமாருக்கு செலவு செய்ய பணம் கொடுத்து வந்த நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு மது அருந்த பணம் தராததால் தாய்மாமனான நடராஜனை அம்மிக் கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று தீர்ப்பு வழங்கிய கோவை 4-வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி விஜயா, சிவகுமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...