உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில் நடக்க இருக்கும் 16-வது ரோஜா கண்காட்சியை முன்னிட்டு, 4 ஆயிரம் ரகங்களில் 30 ஆயிரம் செடிகளை கவாத்து செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று துவக்கி வைத்தார்.
நீலகிரி, ஜனவரி 29
உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில் நடக்க இருக்கும் 16-வது ரோஜா கண்காட்சியை முன்னிட்டு, 4 ஆயிரம் ரகங்களில் 30 ஆயிரம் செடிகளை கவாத்து செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று துவக்கி வைத்தார்.
இயற்கை எழில் கொஞ்சும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இந்த சீசனின் போது வெளிநாடு மற்றும் உள்நாடு சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை புரிவர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க உதகை மலர் கண்காட்சியின் 100-வது ஆண்டு நினைவாக துவக்கப்பட்ட ரோஜா பூங்காவில் மலர் கண்காட்சி தோட்டக்கலைத்துறை சார்பில் நடத்தப்படும்.
இந்நிலையில், இந்தாண்டு கோடை சீசனுக்காக தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பூங்காவிலும் மலர் நாற்றுகள் நடவு பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. நூற்றாண்டு உதகை ரோஜா பூங்காவில் கோடை சீசனுக்காக ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார். இந்த ரோஜா பூங்காவில் 4 ஆயிரம் ரோஜா ரகங்களில் சுமார் 30 ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
16வது ரோஜா கண்காட்சி இந்த ஆண்டு மே மாதத்தில் துவங்க உள்ளதால் ஏப்ரல் மாதம் முதல் ரோஜா மலர்கள் பூத்து குலுங்குவதற்கு 30 ஆயிரம் ரோஜா செடிகள் கவாத்து செய்யும் பணிகள் இன்று துவங்கியது.
உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில் நடக்க இருக்கும் 16-வது ரோஜா கண்காட்சியை முன்னிட்டு, 4 ஆயிரம் ரகங்களில் 30 ஆயிரம் செடிகளை கவாத்து செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று துவக்கி வைத்தார்.
இயற்கை எழில் கொஞ்சும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இந்த சீசனின் போது வெளிநாடு மற்றும் உள்நாடு சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை புரிவர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க உதகை மலர் கண்காட்சியின் 100-வது ஆண்டு நினைவாக துவக்கப்பட்ட ரோஜா பூங்காவில் மலர் கண்காட்சி தோட்டக்கலைத்துறை சார்பில் நடத்தப்படும்.
இந்நிலையில், இந்தாண்டு கோடை சீசனுக்காக தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பூங்காவிலும் மலர் நாற்றுகள் நடவு பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. நூற்றாண்டு உதகை ரோஜா பூங்காவில் கோடை சீசனுக்காக ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார். இந்த ரோஜா பூங்காவில் 4 ஆயிரம் ரோஜா ரகங்களில் சுமார் 30 ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
16வது ரோஜா கண்காட்சி இந்த ஆண்டு மே மாதத்தில் துவங்க உள்ளதால் ஏப்ரல் மாதம் முதல் ரோஜா மலர்கள் பூத்து குலுங்குவதற்கு 30 ஆயிரம் ரோஜா செடிகள் கவாத்து செய்யும் பணிகள் இன்று துவங்கியது.