வாக்காளர்கள் யார் வேண்டுமானாலும் வேட்பாளர் ஆகலாம் : நடிகர்களின் அரசியல் பிரவேசம் குறித்து டி.கே. ரங்கராஜன் கருத்து

வாக்காளர்கள் யார் வேண்டுமானாலும் வேட்பாளர் ஆகலாம் என நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.


கோவை, ஜனவரி 26

வாக்காளர்கள் யார் வேண்டுமானாலும் வேட்பாளர் ஆகலாம் என நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தெரிவித்துள்ளார். 



கோவை, காந்திபுரம் பகுதியில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் உளவுத்துறை டி.ஜி.பி. ஸ்ரீகுமார் எழுதிய ’குஜராத் திரைக்கு பின்னால்’ என்ற புத்தக வெளியிட்டு விழா கமலம் துரைசாமி திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராசன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். 

அப்போது அவர் பேசியதாவது, வாக்காளர்கள் யார் வேண்டுமானாலும் வேட்பாளர் ஆகலாம் என்பதால், நடிகர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மேலும், தமிழகத்தில் இந்துத்துவாவிற்கு எதிராகப் பேசுபவர்கள் ஆர்.எஸ்.எஸ், பாஜகவினரால் மிரட்டப்படுகின்றனர். இந்துத்துவாவை பரப்பவே கவிஞர் வைரமுத்து பிரச்சனை பெரிதாக்கப்பட்டது, என்றார்.

மேலும், தமிழ்த்தாய் வாழ்த்திற்கு விஜயேந்திர சரஸ்வதி எழுந்து நிற்காதது சரியானது அல்ல என்றும் டி.கே.ரங்கராஜன் கூறினார். 

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...