வாக்காளர்கள் யார் வேண்டுமானாலும் வேட்பாளர் ஆகலாம் என நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.
கோவை, ஜனவரி 26
வாக்காளர்கள் யார் வேண்டுமானாலும் வேட்பாளர் ஆகலாம் என நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை, காந்திபுரம் பகுதியில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் உளவுத்துறை டி.ஜி.பி. ஸ்ரீகுமார் எழுதிய ’குஜராத் திரைக்கு பின்னால்’ என்ற புத்தக வெளியிட்டு விழா கமலம் துரைசாமி திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராசன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, வாக்காளர்கள் யார் வேண்டுமானாலும் வேட்பாளர் ஆகலாம் என்பதால், நடிகர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மேலும், தமிழகத்தில் இந்துத்துவாவிற்கு எதிராகப் பேசுபவர்கள் ஆர்.எஸ்.எஸ், பாஜகவினரால் மிரட்டப்படுகின்றனர். இந்துத்துவாவை பரப்பவே கவிஞர் வைரமுத்து பிரச்சனை பெரிதாக்கப்பட்டது, என்றார்.
மேலும், தமிழ்த்தாய் வாழ்த்திற்கு விஜயேந்திர சரஸ்வதி எழுந்து நிற்காதது சரியானது அல்ல என்றும் டி.கே.ரங்கராஜன் கூறினார்.