உடுமலையில் குடியரசு தினமான இன்று காந்தி சிலைக்கு மனு கொடுத்து தமிழர் பண்பாட்டு பேரவையினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர், ஜனவரி 26
உடுமலையில் குடியரசு தினமான இன்று காந்தி சிலைக்கு மனு கொடுத்து தமிழர் பண்பாட்டு பேரவையினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடுமலை ரயில் நிலையத்தில் மதுரை- திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் நின்றுசெல்ல வேண்டும் என்று நீண்ட நாட்களாக தமிழர் பண்பாட்டுப் பேரவையினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதுதொடர்பாக, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை அலட்சியமாகக் கருதி செயல்பட்டு வரும் மத்திய ரயில்வே துறையையும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கண்டித்து இன்று தமிழர் பண்பாட்டு பேரவையினர், உடுமலை காவல்நிலையம் அருகில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மனு கொடுத்து, காந்தியிடம் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கண்டன கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடுமலையில் குடியரசு தினமான இன்று காந்தி சிலைக்கு மனு கொடுத்து தமிழர் பண்பாட்டு பேரவையினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடுமலை ரயில் நிலையத்தில் மதுரை- திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் நின்றுசெல்ல வேண்டும் என்று நீண்ட நாட்களாக தமிழர் பண்பாட்டுப் பேரவையினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதுதொடர்பாக, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை அலட்சியமாகக் கருதி செயல்பட்டு வரும் மத்திய ரயில்வே துறையையும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கண்டித்து இன்று தமிழர் பண்பாட்டு பேரவையினர், உடுமலை காவல்நிலையம் அருகில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மனு கொடுத்து, காந்தியிடம் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கண்டன கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
