ஈஷா விவசாய இயக்கம் சார்பில் கோவையில் விவசாயிகளுக்கு இடுபொருள் பயிற்சி

ஈஷா விவசாய இயக்கம் சார்பாக விவசாயிகளுக்கான "இயற்கை விவசாயத்தின் நுழைவாயில்" என்ற இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு பயிற்சி இன்று அளிக்கப்பட்டது.

கோவை, ஜனவரி 25

ஈஷா விவசாய இயக்கம் சார்பாக விவசாயிகளுக்கான "இயற்கை விவசாயத்தின் நுழைவாயில்" என்ற இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு பயிற்சி இன்று அளிக்கப்பட்டது.



பீளமேட்டில் உள்ள ஈஷா நர்சரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு இயற்கை முறையில் பயிர் வளர்ச்சிக்கான இடுபொருட்களை எப்படி தயாரிப்பது என்ற களப்பயிற்சியை மேற்கொண்டனர். இயற்கை விவசாயத்தை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லும் நோக்கத்தில், இரசாயன உரங்களுக்கு மாற்றாக இயற்கை இடுபொருட்கள் செய்யும் வழிமுறைகள், பயன்படுத்தும் வழிகள், சேமிக்கும் முறைகள், அவற்றின் பலன்கள் போன்றவை கற்றுத் தரப்பட்டது.

இரசாயன விவசாயத்திற்கு மாற்று தேடும் முயற்சியில் இருக்கும் விவசாயிகளுக்கு இது ஒரு வரப் பிரசாதமாக அமையும். பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகள் ஜீவாமிர்தம், பீஜாமிர்தம், கனஜீவாமிர்தம், பத்துஇலைகஷாயம், அக்னிஅஸ்திரம், நீம்அஸ்திரம், புளித்த மோர் கரைசல், மூங்கில் E.M, பழ E.M, மீன்அமிலம், வேப்பங்கொட்டை கரைசல், மூலிகை பூச்சி விரட்டி, திராட்சை ரசம், தேமோர் கரைசல் போன்ற 12 வகையான இடுபொருட்கள் செய்வதற்கு நேரடி செய்முறை பயிற்சியும், களப்பயிற்சியும் பெற்றனர். இந்த இடுபொருட்களில் அடிஉரம், மேலுரம், வளர்ச்சியூக்கி, செயலூக்கி, பூச்சிவிரட்டி போன்றவை அடங்கும். 

முன்னோடி இயற்கை விவசாயி பொம்முராஜ் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தென்னை பற்றிய விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார்.

ஈஷா விவசாய இயக்கம் தன்னார்வத் தொண்டர்களுக்காக ஐந்து மண்டலங்களிலும் நடத்திய இடுபொருள் பயிற்சியில் பங்கு பெற்ற பல விவசாயிகள் தன்னார்வமாக இடுபொருள் தயாரிப்பு பயிற்சியை மற்ற விவசாயிகளுக்குக் கொண்டு செல்ல முனைந்துள்ளனர். கிழக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் தன்னார்வத் தொண்டர்கள் நடத்திய இத்தகைய பயிற்சியில் ஒவ்வொரு மண்டலத்திலும் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பலன் அடைந்தனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...