விவசாயிகளுக்கான வேளாண் தகவல் மையத்தின் 15-வது ஆண்டுவிழா- குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்த வேளாண் அதிகாரிகள்

விவசாயிகளுக்கான வேளாண் தகவல் மையத்தின் 15-வது ஆண்டுவிழா கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

கோவை, ஜனவரி 23

விவசாயிகளுக்கான வேளாண் தகவல் மையத்தின் 15-வது ஆண்டுவிழா கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.



விவசாயத்திற்கு உதவும் விதமாகவும், விவசாயிகளுக்கு எழும் சந்தேகங்களைத் தீர்க்கும் வகையிலும் வேளாண் தகவல் மையம் “கிசான் கால் சென்டர்” தொடங்கப்பட்டது.

இந்த சேவை தொடங்கப்பட்டு 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து, 15-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த சேவைக்கு ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.

கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், ‘சமிதி’ வேளாண்மை பயிற்சி மையத்தின் இயக்குநர் சங்கரலிங்கம் கலந்து கொண்டு இவ்விழாவினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ‘விவசாயிகளுக்கு பயன்பெறும் விதமாகத் தொடங்கப்பட்ட இந்த ‘கிசான் கால் சென்டர்’ சேவையானது தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட வேண்டும்’ என்றார்.

இவ்விழாவில், கோவை வேளாண் இணை இயக்குநர் சுகுமார், மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேளாண்மைத் துறை அதிகாரிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...