விவசாயிகளுக்கான வேளாண் தகவல் மையத்தின் 15-வது ஆண்டுவிழா கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
கோவை, ஜனவரி 23
விவசாயிகளுக்கான வேளாண் தகவல் மையத்தின் 15-வது ஆண்டுவிழா கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

விவசாயத்திற்கு உதவும் விதமாகவும், விவசாயிகளுக்கு எழும் சந்தேகங்களைத் தீர்க்கும் வகையிலும் வேளாண் தகவல் மையம் “கிசான் கால் சென்டர்” தொடங்கப்பட்டது.
இந்த சேவை தொடங்கப்பட்டு 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து, 15-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த சேவைக்கு ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.
கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், ‘சமிதி’ வேளாண்மை பயிற்சி மையத்தின் இயக்குநர் சங்கரலிங்கம் கலந்து கொண்டு இவ்விழாவினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ‘விவசாயிகளுக்கு பயன்பெறும் விதமாகத் தொடங்கப்பட்ட இந்த ‘கிசான் கால் சென்டர்’ சேவையானது தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட வேண்டும்’ என்றார்.
இவ்விழாவில், கோவை வேளாண் இணை இயக்குநர் சுகுமார், மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேளாண்மைத் துறை அதிகாரிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டனர்.
விவசாயிகளுக்கான வேளாண் தகவல் மையத்தின் 15-வது ஆண்டுவிழா கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

விவசாயத்திற்கு உதவும் விதமாகவும், விவசாயிகளுக்கு எழும் சந்தேகங்களைத் தீர்க்கும் வகையிலும் வேளாண் தகவல் மையம் “கிசான் கால் சென்டர்” தொடங்கப்பட்டது.
இந்த சேவை தொடங்கப்பட்டு 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து, 15-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த சேவைக்கு ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.
கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், ‘சமிதி’ வேளாண்மை பயிற்சி மையத்தின் இயக்குநர் சங்கரலிங்கம் கலந்து கொண்டு இவ்விழாவினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ‘விவசாயிகளுக்கு பயன்பெறும் விதமாகத் தொடங்கப்பட்ட இந்த ‘கிசான் கால் சென்டர்’ சேவையானது தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட வேண்டும்’ என்றார்.
இவ்விழாவில், கோவை வேளாண் இணை இயக்குநர் சுகுமார், மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேளாண்மைத் துறை அதிகாரிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டனர்.