கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Coimbatore: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த சதீஷ் (30), கோவை சுந்தராபுரம் எல்ஐசி காலனி பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

நேற்று அவர் தனது நண்பருடன் கணேசபுரம் பகுதியில் உள்ள அம்மன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று பேர், சதீஷை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

அவர் பணம் கொடுக்க மறுத்ததால், கத்தியை காட்டி மிரட்டி அவரது சட்டைப்பையில் இருந்த ரூ.500-ஐ பறித்துள்ளனர். இதைப்பார்த்த பொதுமக்கள் அவர்களை பிடிக்க முயன்றபோது, மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சதீஷ் சுந்தராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்ட நபர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த யுகேந்திரன் (22), போத்தனூர் மேட்டூரைச் சேர்ந்த முகமத் இஸ்மாயில் (28), மற்றும் போத்தனூர் பாரதி நகரைச் சேர்ந்த லிங்க பூபதி (22) என்பது தெரியவந்தது.

இதையடுத்து மூவர் மீதும் 308(4) மற்றும் 351(3) பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...