பேருந்து கட்டணம் உயர்வு குறித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் மாதர் சங்கத்தினர்

பேருந்து கட்டணம் உயர்வு குறித்து கோவையில் பொதுமக்களிடம் நேரடியாக வாக்கு சேகரிக்கும் நூதன போராட்டத்தில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை, ஜனவரி 22

பேருந்து கட்டணம் உயர்வு குறித்து கோவையில் பொதுமக்களிடம் நேரடியாக வாக்கு சேகரிக்கும் நூதன போராட்டத்தில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக அரசு சமீபத்தில் உயர்த்தியுள்ள பேருந்து கட்டணத்திற்குத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் வலுத்து வருகிறது. இந்நிலையில், பொதுமக்களின் அதிருப்தியை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் வாக்கு சேகரிக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவமனை அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்து கட்டண உயர்வு நியாயம், அநியாயம் என்ற வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டு, அதற்கான வாக்கு சீட்டுகளை அங்கு வரும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர். இதில், அனைத்து பொதுமக்களும் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது அநியாயம் என அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

மேலும், பேருந்து நிலையத்தில் இருந்த மக்கள் கட்டண உயர்வால் ஏற்பட்டுள்ள மன உளைச்சலை ஆதங்கத்துடன் வெளிப்படுத்தினர். இந்த வாக்குகளைப் பெற்று அதனை தமிழக அரசுக்கு அனுப்ப உள்ளதாகவும், தமிழகம் முழுவதும் இதுபோன்று பொதுமக்களிடம் வாக்குகளைப் பெற உள்ளதாகவும் மாதர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...