அரசுப் பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் ஆதரவாளர் செந்தில் பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.
கோவை, ஜனவரி 20
அரசுப் பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் ஆதரவாளர் செந்தில் பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- தமிழக அரசு உயர்த்தி உள்ள இந்தப் பேருந்து கட்டண உயர்வால் பேருந்தை பயன்படுத்தும் ரூ. 2 கோடி மக்கள் பேருந்தை பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுமக்களின் சேவை துறையான போக்குவரத்து துறைக்கு போதிய நிதியை அரசு வழங்கவில்லை.
மேலும், இந்தக் கட்டண உயர்வு என்பது முதலமைச்சரின் இயலாமையைக் காட்டுகிறது. மற்ற மாநிலங்களைப் போல தமிழக அரசு செயல்படவில்லை. ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவோம். தனிக்கட்சி துவங்கும் முயற்சிகளில் எதுவும் தற்போது டிடிவி தினகரன் ஈடுபடவில்லை. மேலும், நீதிமன்றத்தில் அதிமுக அம்மா என்ற பெயரில் இயங்க அனுமதி கேட்டு உள்ளார். எப்பொழுது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் 234 தொகுதிகளிலும் தினகரன் தலைமையில் போட்டியிட்டு வெல்வோம்.
டீசல் விலை உயர்வை அடிப்படையாக வைத்து டிக்கெட் விலையை உயர்த்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல். சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு என வந்தால் கூவத்தூர் பழனிசாமியின் அரசு வீட்டிற்கு செல்லும். கூவத்தூர் பழனிச்சாமி மாமியார் வீட்டிற்கு செல்வார். என்றார்.