பேருந்து கட்டண உயர்வைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் : டிடிவி ஆதரவாளர் செந்தில் பாலாஜி

அரசுப் பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் ஆதரவாளர் செந்தில் பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.


கோவை, ஜனவரி 20

அரசுப் பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் ஆதரவாளர் செந்தில் பாலாஜி வலியுறுத்தியுள்ளார். 

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- தமிழக அரசு உயர்த்தி உள்ள இந்தப் பேருந்து கட்டண உயர்வால் பேருந்தை பயன்படுத்தும் ரூ. 2 கோடி மக்கள் பேருந்தை பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பொதுமக்களின் சேவை துறையான போக்குவரத்து துறைக்கு போதிய நிதியை அரசு வழங்கவில்லை.

மேலும், இந்தக் கட்டண உயர்வு என்பது முதலமைச்சரின் இயலாமையைக் காட்டுகிறது. மற்ற மாநிலங்களைப் போல தமிழக அரசு செயல்படவில்லை. ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவோம். தனிக்கட்சி துவங்கும் முயற்சிகளில் எதுவும் தற்போது டிடிவி தினகரன் ஈடுபடவில்லை. மேலும், நீதிமன்றத்தில் அதிமுக அம்மா என்ற பெயரில் இயங்க அனுமதி கேட்டு உள்ளார். எப்பொழுது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் 234 தொகுதிகளிலும் தினகரன் தலைமையில் போட்டியிட்டு வெல்வோம். 

டீசல் விலை உயர்வை அடிப்படையாக வைத்து டிக்கெட் விலையை உயர்த்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல். சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு என வந்தால் கூவத்தூர் பழனிசாமியின் அரசு வீட்டிற்கு செல்லும். கூவத்தூர் பழனிச்சாமி மாமியார் வீட்டிற்கு செல்வார். என்றார். 

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...