பிரிக்கால் பிளாண்ட்-1ல் பணிபுரியும் 25 தொழிலாளர்களை அந்நிர்வாகம் நேற்று (ஜன. 10) தற்காலிகமாக பணிநீக்கம் செய்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் இன்று தொழிலாளர் இணை ஆணையரிடம் மனு அளித்தனர்.
கோவை, ஜனவரி 10
பிரிக்கால் பிளாண்ட்-1ல் பணிபுரியும் 25 தொழிலாளர்களை அந்நிர்வாகம் நேற்று (ஜன. 10) தற்காலிகமாக பணிநீக்கம் செய்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் இன்று தொழிலாளர் இணை ஆணையரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களில் ஒருவரான, பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமைச் சங்கத்தின் துணைச் செயலாளர் கே. ரதீஸ்குமார் கூறுகையில், "தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை பிரிக்கால் நிறுவனம் தொடர்ந்து செய்து வருகிறது. கடைசியாக போடப்பட்ட ஒப்பந்த விதிகளை மீறி, அதிக உற்பத்தி செய்துதருமாறு தொழிலாளர்களை நிர்ப்பந்திக்கிறது. இதுகுறித்து, தொழிலாளர் இணை ஆணையரிடம் ஏற்கனவே புகாரளிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், நிர்வாகத்தின் அதிகாரப் போக்கை எதிர்த்து கேள்விகேட்ட 25 தொழிலாளர்களை இரண்டு நாள் தற்காலிக பணிநீக்கம் செய்வதாக நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. இப்பிரச்சனை குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வரும்போது, போராடிய தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து பழிவாங்கியிருப்பது மற்ற தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை. இதனால், இரண்டு நாள் சம்பளத்தை இழந்து பெரும் மன உளைச்சலை சந்தித்து வருகிறோம்" என்றார்.
இப்பிரச்சனை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் கோவை மாநகர செயலாளர் எம்.எஸ்.வேல்முருகன் கூறுகையில், "சாதாரண நிர்வாகமாக ஆரம்பித்த பிரிக்கால் நிர்வாகம் இன்று உலகின் பல்வேறு நாடுகளில் தங்களின் தொழிற்சாலைகளை அமைத்து வருவாய் ஈட்டி வருகிறது. இந்த அசுர வளர்ச்சிக்கு ஒரே காரணம், அந்நிறுவனத்தில் உள்ள தொழிலாளர்களின் உழைப்பு மட்டுமே. இந்நிலையில், அவர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்து உழைப்பைச் சுரண்டும் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் பிரிக்கால் நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வருடம் தொழிற்சங்கத்தோடு இணைந்து போடப்பட்ட ஒப்பந்த விதிகளை மீறி, அதிக பணிச் சுமையை தொழிலாளர்களின் தலையில் சுமத்தி வருகிறது இந்நிர்வாகம். எந்த விசாரணையும் இல்லாமல் திடீரென்று தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இவை அனைத்தும் வன்மையாகக் கண்டிக்கத்தக்க செயல்கள்.
எனவே, தொழிலாளர் இணை ஆணையர் முறையாக இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களின் நலனும், உரிமைகளும் மீட்கப்பட வேண்டும்" என்றார்.
பிரிக்கால் பிளாண்ட்-1ல் பணிபுரியும் 25 தொழிலாளர்களை அந்நிர்வாகம் நேற்று (ஜன. 10) தற்காலிகமாக பணிநீக்கம் செய்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் இன்று தொழிலாளர் இணை ஆணையரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களில் ஒருவரான, பிரிக்கால் தொழிலாளர்கள் ஒற்றுமைச் சங்கத்தின் துணைச் செயலாளர் கே. ரதீஸ்குமார் கூறுகையில், "தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை பிரிக்கால் நிறுவனம் தொடர்ந்து செய்து வருகிறது. கடைசியாக போடப்பட்ட ஒப்பந்த விதிகளை மீறி, அதிக உற்பத்தி செய்துதருமாறு தொழிலாளர்களை நிர்ப்பந்திக்கிறது. இதுகுறித்து, தொழிலாளர் இணை ஆணையரிடம் ஏற்கனவே புகாரளிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், நிர்வாகத்தின் அதிகாரப் போக்கை எதிர்த்து கேள்விகேட்ட 25 தொழிலாளர்களை இரண்டு நாள் தற்காலிக பணிநீக்கம் செய்வதாக நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. இப்பிரச்சனை குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வரும்போது, போராடிய தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து பழிவாங்கியிருப்பது மற்ற தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை. இதனால், இரண்டு நாள் சம்பளத்தை இழந்து பெரும் மன உளைச்சலை சந்தித்து வருகிறோம்" என்றார்.
இப்பிரச்சனை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் கோவை மாநகர செயலாளர் எம்.எஸ்.வேல்முருகன் கூறுகையில், "சாதாரண நிர்வாகமாக ஆரம்பித்த பிரிக்கால் நிர்வாகம் இன்று உலகின் பல்வேறு நாடுகளில் தங்களின் தொழிற்சாலைகளை அமைத்து வருவாய் ஈட்டி வருகிறது. இந்த அசுர வளர்ச்சிக்கு ஒரே காரணம், அந்நிறுவனத்தில் உள்ள தொழிலாளர்களின் உழைப்பு மட்டுமே. இந்நிலையில், அவர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்து உழைப்பைச் சுரண்டும் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் பிரிக்கால் நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வருடம் தொழிற்சங்கத்தோடு இணைந்து போடப்பட்ட ஒப்பந்த விதிகளை மீறி, அதிக பணிச் சுமையை தொழிலாளர்களின் தலையில் சுமத்தி வருகிறது இந்நிர்வாகம். எந்த விசாரணையும் இல்லாமல் திடீரென்று தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இவை அனைத்தும் வன்மையாகக் கண்டிக்கத்தக்க செயல்கள்.
எனவே, தொழிலாளர் இணை ஆணையர் முறையாக இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களின் நலனும், உரிமைகளும் மீட்கப்பட வேண்டும்" என்றார்.