அப்பல்லோ மருத்துவமனையில் ஜெ.,வை நேரில் பார்த்ததாக 4 பேர் வாக்குமூலம்

அப்பல்போல மருத்துவமனையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருந்த போது, அவரை நேரில் பார்த்ததாக 4 பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ஜனவரி 10

அப்பல்போல மருத்துவமனையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருந்த போது, அவரை நேரில் பார்த்ததாக 4 பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர். 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் உறவினர்கள், அரசு மருத்துவர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவின் உறவினரும், மருத்துவருமான சிவகுமார், உதவியாளர் பூங்குன்றன், தனி பாதுகாவல் அதிகாரி பெருமாள்சாமி ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது.

அதன்பேரில், அவர்களும் நேரில் ஆஜராகி தங்களிடம் இருந்த ஆவணங்களை சமர்ப்பித்தனர். இந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று ஆஜரான ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை நேரில் பார்த்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இவரைத் தொடர்ந்து, முன்னாள் தலைமைச்செயலாளர் ராமமோகன ராவ், முன்னாள் அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், மருத்துவர் பாலாஜி உள்ளிட்டோரும் ஜெயலலிதாவை நேரில் பார்த்தாக வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...