அப்பல்லோ மருத்துவமனையில் ஜெ.,வை நேரில் பார்த்ததாக 4 பேர் வாக்குமூலம்

அப்பல்போல மருத்துவமனையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருந்த போது, அவரை நேரில் பார்த்ததாக 4 பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ஜனவரி 10

அப்பல்போல மருத்துவமனையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருந்த போது, அவரை நேரில் பார்த்ததாக 4 பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர். 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் உறவினர்கள், அரசு மருத்துவர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவின் உறவினரும், மருத்துவருமான சிவகுமார், உதவியாளர் பூங்குன்றன், தனி பாதுகாவல் அதிகாரி பெருமாள்சாமி ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது.

அதன்பேரில், அவர்களும் நேரில் ஆஜராகி தங்களிடம் இருந்த ஆவணங்களை சமர்ப்பித்தனர். இந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று ஆஜரான ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை நேரில் பார்த்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இவரைத் தொடர்ந்து, முன்னாள் தலைமைச்செயலாளர் ராமமோகன ராவ், முன்னாள் அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், மருத்துவர் பாலாஜி உள்ளிட்டோரும் ஜெயலலிதாவை நேரில் பார்த்தாக வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...