கோவை விழாவின் இறுதிநாளில் 600 மாணவர்கள் பங்கேற்கும் ”சிலம்ப சங்கமம்” நிகழ்ச்சி

கொங்குநாடு தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் ”கோவை விழா 2018” -ன் நிறைவு நாளில் மாணவர்களின் சிலம்பாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கோவை, ஜனவரி 10

கொங்குநாடு தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் ”கோவை விழா 2018” -ன் நிறைவு நாளில் மாணவர்களின் சிலம்பாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கோவையில் கடந்த 5-ம் தேதி தொடங்கிய ”கோவை விழா 2018” வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வரும் 12-ம் தேதி நிறைவடையும் இந்த விழாவை, பல்வேறு அமைப்புகள் மற்றும் கோவை மக்கள் இணைந்து பல்வேறு விதமாகக் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, கடந்த ஒருவார காலமாக, நமது கலை மற்றும் கலாச்சாரத்தை உணர்த்தும் வகையில் சுமார் 140-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், கொங்குநாடு தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் ”சிலம்ப சங்கமம்” என்ற சிலம்பாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்ட உள்ளனர். வ.உ.சி. மைதானத்தில் நடக்கும் இந்த சிலம்பாட்ட நிகழ்ச்சி, ”கோவை விழா 2018” -ன் நிறைவு நாளான 12-ம் தேதி மாலை 4 மணிக்கு நடக்கிறது. சுழற்வாள், கேடயம் சண்டை, ரிப்பன் சிலம்பம் மற்றும் தீ சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு விதமான சிலம்பாட்ட நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படுகிறது. 

Newsletter

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடுகளை உடனே சரிசெய்ய வேண்டும் - சிபிஐ(எம்) மனு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கழிவறை பராமரிப்பு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழும் சுகாதார குறைபாடுகளை போ...

பீளமேடு வார்டு 27-ல் மரக்கிளை வெட்டு பணியும் தூய்மை ஆய்வும் - கவுன்சிலர் அம்பிகா தனபால்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டு...

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...