கொங்குநாடு தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் ”கோவை விழா 2018” -ன் நிறைவு நாளில் மாணவர்களின் சிலம்பாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவை, ஜனவரி 10
கொங்குநாடு தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் ”கோவை விழா 2018” -ன் நிறைவு நாளில் மாணவர்களின் சிலம்பாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவையில் கடந்த 5-ம் தேதி தொடங்கிய ”கோவை விழா 2018” வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வரும் 12-ம் தேதி நிறைவடையும் இந்த விழாவை, பல்வேறு அமைப்புகள் மற்றும் கோவை மக்கள் இணைந்து பல்வேறு விதமாகக் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, கடந்த ஒருவார காலமாக, நமது கலை மற்றும் கலாச்சாரத்தை உணர்த்தும் வகையில் சுமார் 140-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கொங்குநாடு தொழில்நுட்பக் கல்லூரியின் சார்பில் ”சிலம்ப சங்கமம்” என்ற சிலம்பாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்ட உள்ளனர். வ.உ.சி. மைதானத்தில் நடக்கும் இந்த சிலம்பாட்ட நிகழ்ச்சி, ”கோவை விழா 2018” -ன் நிறைவு நாளான 12-ம் தேதி மாலை 4 மணிக்கு நடக்கிறது. சுழற்வாள், கேடயம் சண்டை, ரிப்பன் சிலம்பம் மற்றும் தீ சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு விதமான சிலம்பாட்ட நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படுகிறது.