கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
கோவை, ஜனவரி 10
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் 23-வது ஆண்டு விழாவை முன்னிட்டு அக்கட்சியினர் சார்பில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, இன்று மருத்துவமனை வளாகத்திற்கு வந்த அக்கட்சியினர் நோயாளிகளுக்கு பழங்கள் மற்றும் பிஸ்கட்டுகளை வழங்கினர்.
முன்னதாக, மருத்துவமனை வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அம்மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அதிகாரி சவுந்திரவேல் இந்த தூய்மைப்பணியை துவங்கி வைத்தார்.
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் 23-வது ஆண்டு விழாவை முன்னிட்டு அக்கட்சியினர் சார்பில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, இன்று மருத்துவமனை வளாகத்திற்கு வந்த அக்கட்சியினர் நோயாளிகளுக்கு பழங்கள் மற்றும் பிஸ்கட்டுகளை வழங்கினர்.
முன்னதாக, மருத்துவமனை வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அம்மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அதிகாரி சவுந்திரவேல் இந்த தூய்மைப்பணியை துவங்கி வைத்தார்.