7-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள 60 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்களுக்கு நோட்டீஸ்

7-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 60 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை 68 பேருந்து ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ஜனவரி 10

7-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 60 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை 68 பேருந்து ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்கக்கோரி அரசு போக்குவரத்துக் கழகத்தின் 10 தொழிற்சங்கத்தினர் கடந்த வியாழக்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 23 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில், பேருந்து தொழிலாளர்கள் தங்களது வேலைநிறுத்தத்தை கைவிட்டுப் பணிக்கு திரும்ப வேண்டும் என்று தமிழக அரசும், உயர்நீதிமன்றம் மீண்டும், மீண்டும் அறிவுறுத்தி வருகின்றன. 

பேருந்து தொழிலாளர்கள் அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை ஸ்டிரைக்கை தொடர அவர்கள் முடிவு செய்தனர். இதனால் பேருந்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் இன்று 7-வது நாளாக நீடிக்கிறது. முதலில் பணிக்கு வராமல் புறக்கணித்த பேருந்து தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினரையும் அழைத்து வந்து டெப்போக்கள் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இன்று பேருந்து தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் தொழிலாளர் நல ஆணைய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பேருந்து தொழிலாளர்கள் அடுத்தடுத்து தினமும் ஆர்ப்பாட்டத்தை தொடர்வதால் அவர்களது வேலைநிறுத்தப் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. பேருந்துகள் ஓடாததால், தமிழகம் முழுவதும் பொதுமக்கள், அலுவலகம் செல்பவர்கள், பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள், வெளியூர் செல்பவர்கள், வெளி மாநிலங்களுக்கு செல்பவர்கள் என அனைத்துத்தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பேருந்துகள் இல்லாததால் ரயில், கார், ஷேர் ஆட்டோக்களை பயன்படுத்தி வருகின்றனர். 

பேருந்து தொழிலாளர்கள் பணிக்குத் திரும்ப அமைச்சர் விஜயபாஸ்கர் விதித்த கெடு நேற்று மாலையுடன் முடிந்தது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்கள் மூலம் விளக்கம் கேட்டு போராட்டத்தில் ஈடுபடும் பேருந்து ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று வரை சுமார் 60 ஆயிரம் பேருந்து தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. போராட்டத்தின் போது, சட்ட விரோதமாக நடந்து கொண்டதாக கூறி அவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மேலும் தொடரும் என்று போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாகத் தொழிற்சங்க கூட்டமைப்பினர் கூறி உள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அவதி, இயல்பு வாழ்க்கை பாதிப்பு மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் நிலை உருவாகியுள்ளது.

Newsletter

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...