7-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள 60 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்களுக்கு நோட்டீஸ்

7-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 60 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை 68 பேருந்து ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ஜனவரி 10

7-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 60 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை 68 பேருந்து ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்கக்கோரி அரசு போக்குவரத்துக் கழகத்தின் 10 தொழிற்சங்கத்தினர் கடந்த வியாழக்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 23 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில், பேருந்து தொழிலாளர்கள் தங்களது வேலைநிறுத்தத்தை கைவிட்டுப் பணிக்கு திரும்ப வேண்டும் என்று தமிழக அரசும், உயர்நீதிமன்றம் மீண்டும், மீண்டும் அறிவுறுத்தி வருகின்றன. 

பேருந்து தொழிலாளர்கள் அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை ஸ்டிரைக்கை தொடர அவர்கள் முடிவு செய்தனர். இதனால் பேருந்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் இன்று 7-வது நாளாக நீடிக்கிறது. முதலில் பணிக்கு வராமல் புறக்கணித்த பேருந்து தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினரையும் அழைத்து வந்து டெப்போக்கள் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இன்று பேருந்து தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் தொழிலாளர் நல ஆணைய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பேருந்து தொழிலாளர்கள் அடுத்தடுத்து தினமும் ஆர்ப்பாட்டத்தை தொடர்வதால் அவர்களது வேலைநிறுத்தப் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. பேருந்துகள் ஓடாததால், தமிழகம் முழுவதும் பொதுமக்கள், அலுவலகம் செல்பவர்கள், பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள், வெளியூர் செல்பவர்கள், வெளி மாநிலங்களுக்கு செல்பவர்கள் என அனைத்துத்தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பேருந்துகள் இல்லாததால் ரயில், கார், ஷேர் ஆட்டோக்களை பயன்படுத்தி வருகின்றனர். 

பேருந்து தொழிலாளர்கள் பணிக்குத் திரும்ப அமைச்சர் விஜயபாஸ்கர் விதித்த கெடு நேற்று மாலையுடன் முடிந்தது. இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்கள் மூலம் விளக்கம் கேட்டு போராட்டத்தில் ஈடுபடும் பேருந்து ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று வரை சுமார் 60 ஆயிரம் பேருந்து தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. போராட்டத்தின் போது, சட்ட விரோதமாக நடந்து கொண்டதாக கூறி அவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மேலும் தொடரும் என்று போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாகத் தொழிற்சங்க கூட்டமைப்பினர் கூறி உள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அவதி, இயல்பு வாழ்க்கை பாதிப்பு மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் நிலை உருவாகியுள்ளது.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...