மதுபானக் கடையில் 2 ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை தராததால் உயரமான மின்சார கோபுரத்தில் ஏறி இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பொதுமக்களிடையே ஒருவித எரிச்சலை தூண்டியுள்ளது.
திருப்பூர், ஜனவரி 9
மதுபானக் கடையில் 2 ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை தராததால் உயரமான மின்சார கோபுரத்தில் ஏறி இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பொதுமக்களிடையே ஒருவித எரிச்சலை தூண்டியுள்ளது.
திருப்பூர் அருகே பெருமாநல்லூர் ரோடு அண்ணா நகர் பகுதியில் உயர் அழுத்த மின்சாரக் கோபுரத்தில் இளைஞர் ஒருவர் குடிபோதையில் மேலே ஏறி கழுத்தில் கயிறு மாட்டிக் கொண்டு கீழே குதித்து விடுவதாக மிரட்டினார். இதுகுறித்து தகவலறிந்த வடக்கு காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 4 மணி நேரம் போராடி அவரை மேலேயிருந்து கீழே இறக்கி விட்டனர்.
இதனைத்தொடர்ந்து, அவரை விசாரித்ததில், கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (25) என்பதும், இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளதும் தெரியவந்தது. மேலும், இவர் குடும்பத்தை விட்டு அவருடைய அக்கா வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில், மதுபானக் கடையில் 2000 ரூபாய்க்கு சில்லரை தராததால் மனம் உடைந்து குடிபோதையில் தற்கொலைக்கு முயன்றதாக அவர் கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, அவரை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.
மதுபானக் கடையில் 2 ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை தராததால் உயரமான மின்சார கோபுரத்தில் ஏறி இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பொதுமக்களிடையே ஒருவித எரிச்சலை தூண்டியுள்ளது.
திருப்பூர் அருகே பெருமாநல்லூர் ரோடு அண்ணா நகர் பகுதியில் உயர் அழுத்த மின்சாரக் கோபுரத்தில் இளைஞர் ஒருவர் குடிபோதையில் மேலே ஏறி கழுத்தில் கயிறு மாட்டிக் கொண்டு கீழே குதித்து விடுவதாக மிரட்டினார். இதுகுறித்து தகவலறிந்த வடக்கு காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 4 மணி நேரம் போராடி அவரை மேலேயிருந்து கீழே இறக்கி விட்டனர்.
இதனைத்தொடர்ந்து, அவரை விசாரித்ததில், கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (25) என்பதும், இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளதும் தெரியவந்தது. மேலும், இவர் குடும்பத்தை விட்டு அவருடைய அக்கா வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில், மதுபானக் கடையில் 2000 ரூபாய்க்கு சில்லரை தராததால் மனம் உடைந்து குடிபோதையில் தற்கொலைக்கு முயன்றதாக அவர் கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, அவரை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.