மதுக்கடையில் சில்லரை தராததால் மின்சார கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞர்

மதுபானக் கடையில் 2 ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை தராததால் உயரமான மின்சார கோபுரத்தில் ஏறி இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பொதுமக்களிடையே ஒருவித எரிச்சலை தூண்டியுள்ளது.

திருப்பூர், ஜனவரி 9

மதுபானக் கடையில் 2 ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை தராததால் உயரமான மின்சார கோபுரத்தில் ஏறி இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பொதுமக்களிடையே ஒருவித எரிச்சலை தூண்டியுள்ளது.

திருப்பூர் அருகே பெருமாநல்லூர் ரோடு அண்ணா நகர் பகுதியில் உயர் அழுத்த மின்சாரக் கோபுரத்தில் இளைஞர் ஒருவர் குடிபோதையில் மேலே ஏறி கழுத்தில் கயிறு மாட்டிக் கொண்டு கீழே குதித்து விடுவதாக மிரட்டினார். இதுகுறித்து தகவலறிந்த வடக்கு காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 4 மணி நேரம் போராடி அவரை மேலேயிருந்து கீழே இறக்கி விட்டனர்.

இதனைத்தொடர்ந்து, அவரை விசாரித்ததில், கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (25) என்பதும், இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளதும் தெரியவந்தது. மேலும், இவர் குடும்பத்தை விட்டு அவருடைய அக்கா வீட்டில் தனியாக வசித்து வருகிறார். 

இந்நிலையில், மதுபானக் கடையில் 2000 ரூபாய்க்கு சில்லரை தராததால் மனம் உடைந்து குடிபோதையில் தற்கொலைக்கு முயன்றதாக அவர் கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, அவரை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.

Newsletter

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...

Coimbatore Police Fine Youths ₹19,500 for Bike Stunt Near Saravanampatti

Coimbatore City Police imposed a fine of ₹19,500 on four youths after a video showing them performing dangerous stunts a...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சாகசம்; இளைஞர்களுக்கு ₹19,500 அபராதம் விதித்த போலீசார்

சரவணம்பட்டி - கோவில்பாளையம் சாலையில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர்களுக்கு கோவை மாநகர காவல் து...

கோவை சுந்தராபுரத்தில் கத்தி முனையில் வழிப்பறி; 3 பேர் கைது

சுந்தராபுரம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்த நபரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.500 பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைத...

போதைப்பொருள் கடத்தல், பார்சல் மோசடிகளை தடுக்க கூரியர் நிறுவனங்களுக்கு கோவை காவல் துறை முக்கிய அறிவுறுத்தல்..!

கூரியர், பார்சல் மற்றும் டிராவல்ஸ் பார்சல் நிறுவனங்களின் மேலாளர்களுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில், CCTV, KYC,...