மதுக்கடையில் சில்லரை தராததால் மின்சார கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞர்

மதுபானக் கடையில் 2 ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை தராததால் உயரமான மின்சார கோபுரத்தில் ஏறி இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பொதுமக்களிடையே ஒருவித எரிச்சலை தூண்டியுள்ளது.

திருப்பூர், ஜனவரி 9

மதுபானக் கடையில் 2 ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை தராததால் உயரமான மின்சார கோபுரத்தில் ஏறி இளைஞர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பொதுமக்களிடையே ஒருவித எரிச்சலை தூண்டியுள்ளது.

திருப்பூர் அருகே பெருமாநல்லூர் ரோடு அண்ணா நகர் பகுதியில் உயர் அழுத்த மின்சாரக் கோபுரத்தில் இளைஞர் ஒருவர் குடிபோதையில் மேலே ஏறி கழுத்தில் கயிறு மாட்டிக் கொண்டு கீழே குதித்து விடுவதாக மிரட்டினார். இதுகுறித்து தகவலறிந்த வடக்கு காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 4 மணி நேரம் போராடி அவரை மேலேயிருந்து கீழே இறக்கி விட்டனர்.

இதனைத்தொடர்ந்து, அவரை விசாரித்ததில், கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (25) என்பதும், இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளதும் தெரியவந்தது. மேலும், இவர் குடும்பத்தை விட்டு அவருடைய அக்கா வீட்டில் தனியாக வசித்து வருகிறார். 

இந்நிலையில், மதுபானக் கடையில் 2000 ரூபாய்க்கு சில்லரை தராததால் மனம் உடைந்து குடிபோதையில் தற்கொலைக்கு முயன்றதாக அவர் கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, அவரை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.

Newsletter

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...