ஈஷா யோகா மையத்தில் 40 ரஷ்யர்கள் யோகா பயிற்சி

கோவை, ஜனவரி 08

ஈஷா யோகா மையத்தில் பயிற்சி பெறுவதற்காக ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 40 பேர் தமிழகம் வந்துள்ளனர். 



யோகா பயிற்சி கற்கும் ஆர்வம் கொண்டு 40 ரஷ்யர்கள் ஈஷா யோகா மையத்தில் வாரந்தோறும் நடைபெறும் அடிப்படை யோகா வகுப்பான இன்னர் இன்ஜினியரிங் வகுப்பில் கலந்து கொண்டு யோகா பயிற்சி பெற்றனர். ஜனவரி 4-ம் தேதி முதல் ஜனவரி 7-ம் தேதி வரை நடைபெற்ற இவ்வகுப்பில் உபயோகா பயிற்சி மற்றும் சாம்பவி மகாமுத்ரா தியானம் ஆகியவற்றை கற்றுக் கொண்டனர். இவர்களில் 20-க்கும் மேற்பட்டோர் ஈஷா யோகா மையத்தில் ஜனவரி 9 மற்றும் 10-ம் தேதி நடைபெற உள்ள சூர்ய க்ரியா பயிற்சி கற்றுக்கொள்ளவிருக்கின்றனர்.

இவர்களில் பலர் ஆங்கில மொழி புலமை இல்லாதவர்கள். மேலும் சிலர் இதுவே முதன் முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்பவர்கள். யோகா கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில் இவர்கள் தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சத்குரு, ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் இந்திய தூதரக வளாகத்தில் சத்சங்கம் நிகழ்த்தினார். இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

4 நாள் யோகா வகுப்பில் கலந்து கொண்ட நடாஷா என்பவர் இப்பயிற்சி பற்றி கூறுகையில், " நான் ஒரு மொழி பெயர்ப்பாளராக பணியாற்றுகிறேன்.  நான் உலகின் பல இடங்களுக்குப் பயணித்திருக்கிறேன். பல ஆஷ்ரமங்களுக்கு சென்றுள்ளேன். யோகா பயிற்சிகள் கற்றுள்ளேன். ஆனால், ஈஷாவில் கற்றுக்கொண்ட பயிற்சி கற்றுக்கொள்ள சுலபமாகவும் மிகுந்த பலனளிப்பதாகவும் உள்ளது" என்றார்.

யோகா ஆசிரியர்களில் ஒருவரான யூரிகுஸ்மின் கூறுகையில், ஈஷாவில் ரஷ்ய மொழியில் யோகா நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது என்று அறிவித்தவுடனேயே நிகழ்ச்சிக்கு முன்பதிவு செய்ய துவங்கிவிட்டனர். ரஷ்யா, உக்ரைன், கசக்ஸ்தான் மற்றும் உக்ரைனிலிருந்து ரஷ்யமொழி பேசுபவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பயிற்சியில் ஈடுபட்டனர். மேலும், பயிற்சிகள் கற்றுக்கொள்ள ஆர்வம் தெரிவித்துள்ளனர். எனக் கூறினார். 

Newsletter

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...