தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட வந்த கோவையைச் சேர்ந்த 6 வாலிபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை, ஜனவரி 08
தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட வந்த கோவையைச் சேர்ந்த 6 வாலிபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சையது அகமது. இவரையும், இவரின் வகுப்பு தோழர்களான சர்ஜூன், அபிலாஷ், நிஷாஸ் மற்றும் அருண் பாண்டியன் ஆகிய 5 பேரையும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 18-ம் தேதி ஒரு கும்பல் கடத்திச் சென்று, ஆள் ஒன்றிற்கு ரூ.50 ஆயிரம் கேட்டு தாக்குதல் நடத்தியது. அவர்களிடம் பணம் இல்லாததால், செல்போன் மற்றும் இருசக்கர வாகனங்களை பறித்துக்கொண்டு விரட்டிய அந்த கும்பல் தலைமறைவாகியது.
இது தொடர்பாக, உக்கடம் காவல்நிலையத்தில் சையது அகமது புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், முஜிபர் ரகுமான், ரியாசுதீன், பங்கடி பரூக், சையது இப்ராகிம், மணிகண்டன் மற்றும் பவுருதீன் ஆகிய 6 வாலிபர்கள் இந்தக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அந்த 6 பேரிடம் விசாரணை நடத்தியதில் கோவையில் பல்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.
இவர்கள் ஆறு பேரும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், ஆட்கடத்தல், பணம் பறிப்பு போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட வந்த கோவையைச் சேர்ந்த 6 வாலிபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சையது அகமது. இவரையும், இவரின் வகுப்பு தோழர்களான சர்ஜூன், அபிலாஷ், நிஷாஸ் மற்றும் அருண் பாண்டியன் ஆகிய 5 பேரையும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 18-ம் தேதி ஒரு கும்பல் கடத்திச் சென்று, ஆள் ஒன்றிற்கு ரூ.50 ஆயிரம் கேட்டு தாக்குதல் நடத்தியது. அவர்களிடம் பணம் இல்லாததால், செல்போன் மற்றும் இருசக்கர வாகனங்களை பறித்துக்கொண்டு விரட்டிய அந்த கும்பல் தலைமறைவாகியது.
இது தொடர்பாக, உக்கடம் காவல்நிலையத்தில் சையது அகமது புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், முஜிபர் ரகுமான், ரியாசுதீன், பங்கடி பரூக், சையது இப்ராகிம், மணிகண்டன் மற்றும் பவுருதீன் ஆகிய 6 வாலிபர்கள் இந்தக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அந்த 6 பேரிடம் விசாரணை நடத்தியதில் கோவையில் பல்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.
இவர்கள் ஆறு பேரும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், ஆட்கடத்தல், பணம் பறிப்பு போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.