காளை மாட்டுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த விவசாயிகள்

நாட்டு மாடு வளர்ப்புத் திட்டத்தினை தமிழ்நாட்டில் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க காளை மாட்டுடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


கோவை, ஜனவரி 8

நாட்டு மாடு வளர்ப்புத் திட்டத்தினை தமிழ்நாட்டில் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க காளை மாட்டுடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



இதுகுறித்து அந்த சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ந.சக்திவேல் வழங்கியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

பண்டை காலத்தில் விவசாய முறைக்கும், கலப்படம் இல்லாத உணவு உற்பத்தி முறைக்கும் நம் நாட்டு மாடுகள் பெரிதும் உதவியுள்ளன. கால்நடைகள் மூலம் வரும் வருவாய் விவசாய வாழ்க்கை முறைக்கும் மக்களுக்கும் பயன் உள்ளதாக இருந்த நிலையில் தற்போது நாட்டுமாடுகள் அழியும் தருவாயில் உள்ளது. 

இதனைத் தடுக்க நாட்டு மாடு வளர்ப்பை உருவாக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக வளர்ந்து வரும் இக்காலத்திற்கு தமிழக அரசு நாட்டு மாடு வளர்ப்புத் திட்டத்தை புதியதாக உருவாக்க வேண்டும். மேலும், விவசாயிகளுக்கு மானிய விலையில் கூட்டுறவு வங்கி மூலம் வட்டியில்லா கடன் உதவி வழங்கி நாட்டு மாடு வளர்ப்புத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.

மேலும், நாட்டு மாடு வளர்ப்பு மூலம் உற்பத்தியாகும் பால் கொள்முதலும், எதிர்காலத்தில் ஆவின் கொள்முதல் நிலையத்தின் மூலம் வழங்கப்பட வேண்டும். நகரத்திலும், கிராமப் புறங்களிலும் வீட்டுக்கு ஒரு மாடு வளர்ப்புத் திட்டம் உருவாக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, காங்கயம் இன கால்நடைகளை அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...