காளை மாட்டுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த விவசாயிகள்

நாட்டு மாடு வளர்ப்புத் திட்டத்தினை தமிழ்நாட்டில் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க காளை மாட்டுடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


கோவை, ஜனவரி 8

நாட்டு மாடு வளர்ப்புத் திட்டத்தினை தமிழ்நாட்டில் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க காளை மாட்டுடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



இதுகுறித்து அந்த சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ந.சக்திவேல் வழங்கியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

பண்டை காலத்தில் விவசாய முறைக்கும், கலப்படம் இல்லாத உணவு உற்பத்தி முறைக்கும் நம் நாட்டு மாடுகள் பெரிதும் உதவியுள்ளன. கால்நடைகள் மூலம் வரும் வருவாய் விவசாய வாழ்க்கை முறைக்கும் மக்களுக்கும் பயன் உள்ளதாக இருந்த நிலையில் தற்போது நாட்டுமாடுகள் அழியும் தருவாயில் உள்ளது. 

இதனைத் தடுக்க நாட்டு மாடு வளர்ப்பை உருவாக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக வளர்ந்து வரும் இக்காலத்திற்கு தமிழக அரசு நாட்டு மாடு வளர்ப்புத் திட்டத்தை புதியதாக உருவாக்க வேண்டும். மேலும், விவசாயிகளுக்கு மானிய விலையில் கூட்டுறவு வங்கி மூலம் வட்டியில்லா கடன் உதவி வழங்கி நாட்டு மாடு வளர்ப்புத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.

மேலும், நாட்டு மாடு வளர்ப்பு மூலம் உற்பத்தியாகும் பால் கொள்முதலும், எதிர்காலத்தில் ஆவின் கொள்முதல் நிலையத்தின் மூலம் வழங்கப்பட வேண்டும். நகரத்திலும், கிராமப் புறங்களிலும் வீட்டுக்கு ஒரு மாடு வளர்ப்புத் திட்டம் உருவாக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, காங்கயம் இன கால்நடைகளை அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...