காளை மாட்டுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த விவசாயிகள்

நாட்டு மாடு வளர்ப்புத் திட்டத்தினை தமிழ்நாட்டில் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க காளை மாட்டுடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


கோவை, ஜனவரி 8

நாட்டு மாடு வளர்ப்புத் திட்டத்தினை தமிழ்நாட்டில் உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க காளை மாட்டுடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



இதுகுறித்து அந்த சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ந.சக்திவேல் வழங்கியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

பண்டை காலத்தில் விவசாய முறைக்கும், கலப்படம் இல்லாத உணவு உற்பத்தி முறைக்கும் நம் நாட்டு மாடுகள் பெரிதும் உதவியுள்ளன. கால்நடைகள் மூலம் வரும் வருவாய் விவசாய வாழ்க்கை முறைக்கும் மக்களுக்கும் பயன் உள்ளதாக இருந்த நிலையில் தற்போது நாட்டுமாடுகள் அழியும் தருவாயில் உள்ளது. 

இதனைத் தடுக்க நாட்டு மாடு வளர்ப்பை உருவாக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக வளர்ந்து வரும் இக்காலத்திற்கு தமிழக அரசு நாட்டு மாடு வளர்ப்புத் திட்டத்தை புதியதாக உருவாக்க வேண்டும். மேலும், விவசாயிகளுக்கு மானிய விலையில் கூட்டுறவு வங்கி மூலம் வட்டியில்லா கடன் உதவி வழங்கி நாட்டு மாடு வளர்ப்புத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.

மேலும், நாட்டு மாடு வளர்ப்பு மூலம் உற்பத்தியாகும் பால் கொள்முதலும், எதிர்காலத்தில் ஆவின் கொள்முதல் நிலையத்தின் மூலம் வழங்கப்பட வேண்டும். நகரத்திலும், கிராமப் புறங்களிலும் வீட்டுக்கு ஒரு மாடு வளர்ப்புத் திட்டம் உருவாக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, காங்கயம் இன கால்நடைகளை அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...