கருணாநிதியைத் தொடர்ந்து ஆர்.எம்.வீரப்பனுடன் நடிகர் ரஜினி சந்திப்பு

கருணாநிதியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பனை இன்று சந்தித்துப் பேசினார்.

ஜனவரி 04:

கருணாநிதியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பனை இன்று சந்தித்துப் பேசினார். 

கடந்த டிசம்பர் 31-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாகவும், தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும் அறிவித்திருந்தார். மேலும், தான் செய்யப்போவது ஆன்மீக அரசியல் என்றும், அதில் உண்மை, நேர்மையைப் பின்பற்ற உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

இதைத்தொடர்ந்து, அரசியலில் ஈடுபடுவதற்கான பணிகளில் அவர் ஈடுபட்டு வரும் நிலையில், முக்கியத் தலைவர்களையும் சந்தித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பனை இன்று சந்தித்துப் பேசினார். சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ரஜினி நேற்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசிபெற்ற நிலையில் இன்று ஆர்.எம்.வீரப்பனை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...