பொங்கல் பண்டிகையொட்டி சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

ஜனவரி 03

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் 11,983 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அமைச்சர்  எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். 

பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து சென்னை பல்லவன் இல்லத்தில் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- பொங்கல் பண்டிகைக்கு 11,983 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். 11, 12, 13ம் தேதிகளில் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதற்காக முன்பதிவு செய்ய 29 சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்படும். ஜனவரி 9-ம் தேதி முதல் 13ம் தேதி முன்பதிவு மையங்களில் முன்பதிவு செய்யப்படும். இந்த முறை 6 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பண்டிகை முடிந்து மக்கள் திரும்பி வரச் சென்னைக்கு 3,000 பேருந்துகளும், தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு 10 ஆயிரம் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும். சென்னையில் கோயம்பேடு அல்லாது ஐந்து தற்காலிக பேருந்து நிலையங்கள் செயல்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார். 

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...