பொங்கல் பண்டிகையொட்டி சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

ஜனவரி 03

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் 11,983 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அமைச்சர்  எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். 

பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து சென்னை பல்லவன் இல்லத்தில் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- பொங்கல் பண்டிகைக்கு 11,983 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். 11, 12, 13ம் தேதிகளில் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதற்காக முன்பதிவு செய்ய 29 சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்படும். ஜனவரி 9-ம் தேதி முதல் 13ம் தேதி முன்பதிவு மையங்களில் முன்பதிவு செய்யப்படும். இந்த முறை 6 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பண்டிகை முடிந்து மக்கள் திரும்பி வரச் சென்னைக்கு 3,000 பேருந்துகளும், தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு 10 ஆயிரம் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும். சென்னையில் கோயம்பேடு அல்லாது ஐந்து தற்காலிக பேருந்து நிலையங்கள் செயல்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார். 

Newsletter

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...