மேட்டுப்பாளையத்தில் நாளை (ஜன. 4) துவங்க உள்ள யானைகள் நலவாழ்வு முகாமில் கலந்துகொள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானை கல்யாணி இன்று கோவிலில் இருந்து வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
கோவை, ஜனவரி 3
மேட்டுப்பாளையத்தில் நாளை (ஜன. 4) துவங்க உள்ள யானைகள் நலவாழ்வு முகாமில் கலந்துகொள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானை கல்யாணி இன்று கோவிலில் இருந்து வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டியில் நாளை யானைகள் நலவாழ்வு முகாம் துவங்க உள்ளது. யானைகளுக்கு புத்துணர்வை அளிக்கும் வகையில் இந்த முகாம் வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் கலந்து கொள்வதற்காக பேரூர் பகுதியில் உள்ள பட்டீஸ்வரர் கோவில் யானையான கல்யாணி இன்று புறப்பட்டுச் சென்றது. 26 வயதாகும் கல்யாணி காலை குளிக்க வைக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டது.
கோவிலின் உள்ளே யானைக்கு மாலை அணிவிக்கப்பட்ட பின்னர் லாரியில் பாதுகாப்பாக தேக்கம்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதேப்போன்று, தமிழகம் முழுவதுமுள்ள கோவில் திருப்பணிகளில் ஈடுபடும் யானைகளுக்கு அந்தந்த கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
மேட்டுப்பாளையத்தில் நாளை (ஜன. 4) துவங்க உள்ள யானைகள் நலவாழ்வு முகாமில் கலந்துகொள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானை கல்யாணி இன்று கோவிலில் இருந்து வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டியில் நாளை யானைகள் நலவாழ்வு முகாம் துவங்க உள்ளது. யானைகளுக்கு புத்துணர்வை அளிக்கும் வகையில் இந்த முகாம் வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் கலந்து கொள்வதற்காக பேரூர் பகுதியில் உள்ள பட்டீஸ்வரர் கோவில் யானையான கல்யாணி இன்று புறப்பட்டுச் சென்றது. 26 வயதாகும் கல்யாணி காலை குளிக்க வைக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டது.
கோவிலின் உள்ளே யானைக்கு மாலை அணிவிக்கப்பட்ட பின்னர் லாரியில் பாதுகாப்பாக தேக்கம்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதேப்போன்று, தமிழகம் முழுவதுமுள்ள கோவில் திருப்பணிகளில் ஈடுபடும் யானைகளுக்கு அந்தந்த கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.