யானைகள் புத்துணர்வு முகாம் நாளை துவக்கம்- உற்சாகத்துடன் புறப்பட்டுச் சென்ற கல்யாணி

மேட்டுப்பாளையத்தில் நாளை (ஜன. 4) துவங்க உள்ள யானைகள் நலவாழ்வு முகாமில் கலந்துகொள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானை கல்யாணி இன்று கோவிலில் இருந்து வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

கோவை, ஜனவரி 3

மேட்டுப்பாளையத்தில் நாளை (ஜன. 4) துவங்க உள்ள யானைகள் நலவாழ்வு முகாமில் கலந்துகொள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானை கல்யாணி இன்று கோவிலில் இருந்து வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டியில் நாளை யானைகள் நலவாழ்வு முகாம் துவங்க உள்ளது. யானைகளுக்கு புத்துணர்வை அளிக்கும் வகையில் இந்த முகாம் வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் கலந்து கொள்வதற்காக பேரூர் பகுதியில் உள்ள பட்டீஸ்வரர் கோவில் யானையான கல்யாணி இன்று புறப்பட்டுச் சென்றது. 26 வயதாகும் கல்யாணி காலை குளிக்க வைக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டது.

கோவிலின் உள்ளே யானைக்கு மாலை அணிவிக்கப்பட்ட பின்னர் லாரியில் பாதுகாப்பாக தேக்கம்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதேப்போன்று, தமிழகம் முழுவதுமுள்ள கோவில் திருப்பணிகளில் ஈடுபடும் யானைகளுக்கு அந்தந்த கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...