யானைகள் புத்துணர்வு முகாம் நாளை துவக்கம்- உற்சாகத்துடன் புறப்பட்டுச் சென்ற கல்யாணி

மேட்டுப்பாளையத்தில் நாளை (ஜன. 4) துவங்க உள்ள யானைகள் நலவாழ்வு முகாமில் கலந்துகொள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானை கல்யாணி இன்று கோவிலில் இருந்து வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

கோவை, ஜனவரி 3

மேட்டுப்பாளையத்தில் நாளை (ஜன. 4) துவங்க உள்ள யானைகள் நலவாழ்வு முகாமில் கலந்துகொள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானை கல்யாணி இன்று கோவிலில் இருந்து வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டியில் நாளை யானைகள் நலவாழ்வு முகாம் துவங்க உள்ளது. யானைகளுக்கு புத்துணர்வை அளிக்கும் வகையில் இந்த முகாம் வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் கலந்து கொள்வதற்காக பேரூர் பகுதியில் உள்ள பட்டீஸ்வரர் கோவில் யானையான கல்யாணி இன்று புறப்பட்டுச் சென்றது. 26 வயதாகும் கல்யாணி காலை குளிக்க வைக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டது.

கோவிலின் உள்ளே யானைக்கு மாலை அணிவிக்கப்பட்ட பின்னர் லாரியில் பாதுகாப்பாக தேக்கம்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதேப்போன்று, தமிழகம் முழுவதுமுள்ள கோவில் திருப்பணிகளில் ஈடுபடும் யானைகளுக்கு அந்தந்த கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...