அடையாள அட்டை உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் பணி புறக்கணிப்பு போராட்டம்

கோவை, ஜனவரி 3

நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யும் போது, வழக்கறிஞர் அடையாள அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று முதல் காலவரையற்ற பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யும் போது, அதில் ஆஜராகும் வழக்கறிஞரின் அடையாள அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்திரவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்த உத்திரவினை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் காலவரையற்ற பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, கோவையில் 3000-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...