கோவை, ஜனவரி 3
நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யும் போது, வழக்கறிஞர் அடையாள அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று முதல் காலவரையற்ற பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யும் போது, அதில் ஆஜராகும் வழக்கறிஞரின் அடையாள அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்திரவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த உத்திரவினை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் காலவரையற்ற பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, கோவையில் 3000-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யும் போது, வழக்கறிஞர் அடையாள அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று முதல் காலவரையற்ற பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யும் போது, அதில் ஆஜராகும் வழக்கறிஞரின் அடையாள அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்திரவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த உத்திரவினை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் காலவரையற்ற பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, கோவையில் 3000-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.