அரசு அச்சகத்தை மூட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு

கோவை, ஜனவரி 1

பெரியநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும் அரசு அச்சகத்தை மூட எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற ஜனவரி 6-ம் தேதியன்று அச்சக முற்றுகை போராட்டமும், 9-ம் தேதியன்று கடையடைப்புப் போராட்டமும் நடத்துவது என அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.



கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் இயங்கி வரும் இந்திய அரசு அச்சகத்தை மூட கடந்த சில காலமாக மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இன்று கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. தபெதிக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, டிடிவி தினகரன் அணி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பங்கேற்றன.

இதில் இந்திய அரசு அச்சகத்தை மூட எதிர்ப்பு தெரிவித்து, வருகின்ற ஜனவரி 6-ம் தேதி அச்சக முற்றுகை போராட்டமும், 9-ம் தேதி பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் இருந்து வீரபாண்டி பிரிவு வரை கடையடைப்புப் போராட்டமும் நடத்துவது என  முடிவு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, தபெதிக பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், 1963ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் காமராஜரால் துவக்கி வைக்கப்பட்ட இந்த அச்சகத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்த நிலையில் தற்போது 100 குடும்பங்களுக்கும் குறைவாகவே உள்ளது. வேலை வாய்ப்புகளை உருவாக்கத் துவங்கப்பட்ட இந்த அரசு அச்சகத்தை மூடும் முடிவை மத்திய அரசு கைவிடும் வரை தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...