அரசு அச்சகத்தை மூட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு

கோவை, ஜனவரி 1

பெரியநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும் அரசு அச்சகத்தை மூட எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற ஜனவரி 6-ம் தேதியன்று அச்சக முற்றுகை போராட்டமும், 9-ம் தேதியன்று கடையடைப்புப் போராட்டமும் நடத்துவது என அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.



கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் இயங்கி வரும் இந்திய அரசு அச்சகத்தை மூட கடந்த சில காலமாக மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இன்று கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. தபெதிக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, டிடிவி தினகரன் அணி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பங்கேற்றன.

இதில் இந்திய அரசு அச்சகத்தை மூட எதிர்ப்பு தெரிவித்து, வருகின்ற ஜனவரி 6-ம் தேதி அச்சக முற்றுகை போராட்டமும், 9-ம் தேதி பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் இருந்து வீரபாண்டி பிரிவு வரை கடையடைப்புப் போராட்டமும் நடத்துவது என  முடிவு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, தபெதிக பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், 1963ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் காமராஜரால் துவக்கி வைக்கப்பட்ட இந்த அச்சகத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்த நிலையில் தற்போது 100 குடும்பங்களுக்கும் குறைவாகவே உள்ளது. வேலை வாய்ப்புகளை உருவாக்கத் துவங்கப்பட்ட இந்த அரசு அச்சகத்தை மூடும் முடிவை மத்திய அரசு கைவிடும் வரை தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...