அரசு அச்சகத்தை மூட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு

கோவை, ஜனவரி 1

பெரியநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும் அரசு அச்சகத்தை மூட எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற ஜனவரி 6-ம் தேதியன்று அச்சக முற்றுகை போராட்டமும், 9-ம் தேதியன்று கடையடைப்புப் போராட்டமும் நடத்துவது என அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.



கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் இயங்கி வரும் இந்திய அரசு அச்சகத்தை மூட கடந்த சில காலமாக மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இன்று கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. தபெதிக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, டிடிவி தினகரன் அணி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பங்கேற்றன.

இதில் இந்திய அரசு அச்சகத்தை மூட எதிர்ப்பு தெரிவித்து, வருகின்ற ஜனவரி 6-ம் தேதி அச்சக முற்றுகை போராட்டமும், 9-ம் தேதி பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் இருந்து வீரபாண்டி பிரிவு வரை கடையடைப்புப் போராட்டமும் நடத்துவது என  முடிவு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, தபெதிக பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், 1963ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் காமராஜரால் துவக்கி வைக்கப்பட்ட இந்த அச்சகத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்த நிலையில் தற்போது 100 குடும்பங்களுக்கும் குறைவாகவே உள்ளது. வேலை வாய்ப்புகளை உருவாக்கத் துவங்கப்பட்ட இந்த அரசு அச்சகத்தை மூடும் முடிவை மத்திய அரசு கைவிடும் வரை தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...