கோவையில் புத்தாண்டு கொண்டாட வந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி

கோவை, ஜனவரி.1: 

கோவையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வந்த மூன்று மாணவர்கள் சலைவிபத்தில் சிக்கி பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் பகுதியை சேர்ந்தவர் ராகுல். கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றார்.

இவர் கோவையொ புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு திருப்பூரில் இருந்து தனது நண்பர்களுடன் கார் மூலம் கோவை நோக்கி வந்து கொண்டிருந்தார். 

அவர்களது கார் சூலூரை அடுத்த தென்னம்பாளையம் அருகே வந்த போது சாலையில் பஞ்சாராகி நின்று கொண்டு இருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் காரில் வந்த ராகுல் , தாலிப், பிரசாத் ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

மேலும்,  படுகாயமடைந்த தியாகு என்பவர்  கோவை அரசு மருத்துவமனையிலும்,  நவீன், சதாம் உசேன், சுரேஷ், நவீன் நான்கு பேர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து சூலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவையில் நேற்று இரவு நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட  வாகன விபத்துகள் மற்றும் மோதல்களினால் காயமடைந்த 80 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அம்மருத்துவமனையில் ஓரே நேரத்தில் ஏராளமானோர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருப்பதால் விபத்து மற்றும் காயசிகிச்சை பிரிவில் நெரிசல் அதிகரித்துள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...