கோவை, ஜனவரி.1:
கோவையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வந்த மூன்று மாணவர்கள் சலைவிபத்தில் சிக்கி பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் பகுதியை சேர்ந்தவர் ராகுல். கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றார்.
இவர் கோவையொ புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு திருப்பூரில் இருந்து தனது நண்பர்களுடன் கார் மூலம் கோவை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அவர்களது கார் சூலூரை அடுத்த தென்னம்பாளையம் அருகே வந்த போது சாலையில் பஞ்சாராகி நின்று கொண்டு இருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் காரில் வந்த ராகுல் , தாலிப், பிரசாத் ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
மேலும், படுகாயமடைந்த தியாகு என்பவர் கோவை அரசு மருத்துவமனையிலும், நவீன், சதாம் உசேன், சுரேஷ், நவீன் நான்கு பேர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து சூலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் நேற்று இரவு நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட வாகன விபத்துகள் மற்றும் மோதல்களினால் காயமடைந்த 80 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அம்மருத்துவமனையில் ஓரே நேரத்தில் ஏராளமானோர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருப்பதால் விபத்து மற்றும் காயசிகிச்சை பிரிவில் நெரிசல் அதிகரித்துள்ளது.
கோவையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வந்த மூன்று மாணவர்கள் சலைவிபத்தில் சிக்கி பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் பகுதியை சேர்ந்தவர் ராகுல். கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றார்.
இவர் கோவையொ புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு திருப்பூரில் இருந்து தனது நண்பர்களுடன் கார் மூலம் கோவை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அவர்களது கார் சூலூரை அடுத்த தென்னம்பாளையம் அருகே வந்த போது சாலையில் பஞ்சாராகி நின்று கொண்டு இருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் காரில் வந்த ராகுல் , தாலிப், பிரசாத் ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
மேலும், படுகாயமடைந்த தியாகு என்பவர் கோவை அரசு மருத்துவமனையிலும், நவீன், சதாம் உசேன், சுரேஷ், நவீன் நான்கு பேர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து சூலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் நேற்று இரவு நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட வாகன விபத்துகள் மற்றும் மோதல்களினால் காயமடைந்த 80 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அம்மருத்துவமனையில் ஓரே நேரத்தில் ஏராளமானோர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருப்பதால் விபத்து மற்றும் காயசிகிச்சை பிரிவில் நெரிசல் அதிகரித்துள்ளது.