கோவையில் புத்தாண்டு கொண்டாட வந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி

கோவை, ஜனவரி.1: 

கோவையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வந்த மூன்று மாணவர்கள் சலைவிபத்தில் சிக்கி பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் பகுதியை சேர்ந்தவர் ராகுல். கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றார்.

இவர் கோவையொ புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு திருப்பூரில் இருந்து தனது நண்பர்களுடன் கார் மூலம் கோவை நோக்கி வந்து கொண்டிருந்தார். 

அவர்களது கார் சூலூரை அடுத்த தென்னம்பாளையம் அருகே வந்த போது சாலையில் பஞ்சாராகி நின்று கொண்டு இருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் காரில் வந்த ராகுல் , தாலிப், பிரசாத் ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

மேலும்,  படுகாயமடைந்த தியாகு என்பவர்  கோவை அரசு மருத்துவமனையிலும்,  நவீன், சதாம் உசேன், சுரேஷ், நவீன் நான்கு பேர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து சூலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கோவையில் நேற்று இரவு நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட  வாகன விபத்துகள் மற்றும் மோதல்களினால் காயமடைந்த 80 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அம்மருத்துவமனையில் ஓரே நேரத்தில் ஏராளமானோர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருப்பதால் விபத்து மற்றும் காயசிகிச்சை பிரிவில் நெரிசல் அதிகரித்துள்ளது.

Newsletter

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...