சிறப்பு புத்தாண்டு வழிபாடு கோவில்களில் குவியும் மக்கள் கூட்டம்

கோவை, ஜனவரி. 1

கோவையில் புத்தாண்டு சிறப்பு வழிபாட்டிற்காக கோவில்களில் மக்கள் திரண்டு வருகின்றனர்.

புத்தாண்டு தினத்தில் மக்கள் தங்களுக்கு விருப்பமான கோவில்களுக்கு சென்று இந்தாண்டு நல்ல ஆண்டாக அமைய  பிரார்த்தனை செய்வது வழக்கம்

அதன்படி, ஆங்கில புத்தாண்டான இன்று கோவையில் உள்ள பல்வேறு கோவில்களிலும், தேவாலயங்களிலும் அதிகாலை முதலே மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக புலியகுளம் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் ராஜஅபிஷேகம்  நடைபெற்றது. 

சிற்ப்பு வழிபாட்டிற்காக அக்கோவிலில் உள்ள பிரமாண்டமான விநாயகர் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. 

ஆண்டின் முதல் நாளை முழுமுதற்கடவுளான விநாயகரை வழிபட்டு துவங்க வேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...